Reading Time: < 1 minuteகனடாவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மூன்று மில்லியன் டொலர் நட்டஈடு வழங்கப்பட உள்ளது. கனடாவின் மொன்ட்ரியல் நகரம் இந்த நட்டஈட்டுத் தொகையை வழங்க உள்ளது. நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நகர பொலிஸார், போராட்டக்காரர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆறு போராட்டக்காரர்களை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் அடிப்படை உரிமைகளை பொலிஸார் மீறிச் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்தRead More →

Reading Time: < 1 minuteகடந்த குளிர்கால டிரக் போராட்டங்களை முடிவுக்கு கொண்டு வர, ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகால அதிகாரங்களை செயல்படுத்தியது முற்றிலும் சரியான தேர்வு என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சாட்சியம் அளித்துள்ளார். கனடாவின் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்கும் விசாரணைக்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) ஆஜரானபோது ட்ரூடோ இந்த கருத்தினை வெளியிட்டார். தடுப்பூசி ஆணைக்கு எதிரான போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர பொலிஸ்துறையினரிடம் சரியான திட்டம் இருப்பதாக தாம் உணரவில்லை என்றும்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பெண் ஒருவரை தொடர்புகொண்ட பொலிசார், அவரது மகன் பொதுக்கழிப்பிடம் ஒன்றில் சடலமாகக் கிடப்பதாகக் கூறியதால், அந்த குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்கனடாவின் New Brunswick மாகாணத்திலுள்ள Moncton நகரில் வாழ்ந்துவரும் Donna Price என்ற பெண்ணை கடந்த செவ்வாயன்று தொலைபேசியில் தொடர்புகொண்ட பொலிசார், அவரது 29 வயது மகன் பொதுக்கழிப்பிடம் ஒன்றில் இறந்துகிடப்பதாக தெரிவித்துள்ளனர். தான் காதில் கேட்ட செய்தியால் உறைந்துபோன Donna, அழுது கதறியRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்கொஅலைக்கு முயன்ற நிலையில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த குடும்பஸ்தர் சுந்தரலிங்கம் கிரிதரனின் உடலை இலங்கைக்கு எடுத்துவர நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி உருக்கமான கோரிக்கையை அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது. சம்பவத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அனைத்து வகையான வாடகை கட்டணங்களும் மீண்டும் அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், சராசரியாக 15.4% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கனடாவில் உள்ள அனைத்து சொத்து வகைகளின் சராசரி மாத வாடகை செப்டம்பர் மாதம் $2,043 ஆக இருந்தது. அதாவது, செப்டம்பரில் ஒற்றை குடும்ப வீடுகள் மாதத்திற்கு $3,014 என வாடகைக்கு விடப்பட்டன. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12.1% அதிகமாகும். மேலும், செப்டம்பர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் பாதசாரியொருவர் விபத்தில் சிக்கிய போது அவரை மீட்க சென்ற மற்றுமொரு பெண் படுகாயமடைந்துள்ளார். குறித்த பெண் பாதசாரி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பிரம்டனின் ஹெரிடேஜ் மற்றும் ஸ்டீலஸ் வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த பெண் 41 வயதானவர் எனவும், 30 வயதான பெண் உயிராபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 41 வயதான பெண்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 134 பயணிகளுடன் பயணம் செய்த விமானமொன்று ஓடு பாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது. ப்ளயர் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது. தரையிறக்கப்பட்ட போது இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவின் வாட்டர்லூ சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கனேடிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ப்ளயார் விமான சேவை நிறுவனத்தின் F8 501Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக காத்திருந்த முதியவர் ஒருவரிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக காத்திருந்த மற்றுமொரு நோயாளி இந்த முதிய நோயாளியிடம் கொள்ளையிட்டுள்ளார். றொரன்டோ வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடுமையான இடுப்பு வலி காரணமாக வைத்தியசாலையில் காத்திருந்த 68 வயது பெண்ணிடம் கொள்ளையிடப்பட்டுள்ளது. றொரன்டோவின் பிரபல வைத்தியசாலை ஒன்றில் தனது தாயாரை சிகிச்சைக்காக அனுமதிக்க சென்றிருந்த்தாகவும், காத்திருந்த வேளையில் தொலைபேசி அழைப்பு எடுக்க வெளியே சென்ற போது இந்தRead More →