Reading Time: < 1 minuteஇந்த சம்பவம் கட்டடமொன்றின் வரவேற்பறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. க்ளென் எவரஸ்ட் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த நபரை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவமொன்று குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில நபர்கள் தீயனைப்புப் படையினர் என்ற போர்வயில் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். போலியான பாதுகாப்பு கருவிகள் (safety kits) விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் ஹால்டன் பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹால்டனின் பர்லிங்டன் தீயனைப்புப் பிரிவினர் பாதுகாப்பு கருவிகளை விற்பனை செய்யவில்லை எனவும் மோசடி கும்பல் ஒன்று போலியாக விற்பனைRead More →

Reading Time: < 1 minuteநாட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. கடந்த மாதம் நாட்டின் பணவீக்க வீதம் 7.6 வீதமாக காணப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நாற்பது ஆண்டுகளில் பதிவான அதி கூடிய பணவீக்க வீதமாக 8.1 வீத பணவீக்கம் பதிவாகியிருந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக ஓராண்டுக்கு முன்னர் இந்த பண வீக்கத்தை விடவும் குறைந்தளவு பணவீக்கம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த 2021ல் மருத்துவ உதவியுடன் கருணைக் கொலைக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை பத்தாயிரம் தாண்டியுள்ளதாக பெடரல் ஆண்டு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 2020ல் இருந்து குறித்த எண்ணிக்கையானது 32% அதிகரித்துள்ளதாகவும் பெடரல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் 2021ல் பதிவான இறப்பில் 3.3 சதவீதம் (10.064) மருத்துவ ரீதியான கருணைக் கொலை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிராந்திய ரீதியாக கியூபெக்கில் 4.7% எனவும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4.8% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டு வாடகை தொகை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதத்தில் அநேகமான மாகாணங்களில் வாடகை தொகை சராசரியாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மிக அதிக அளவில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் அதற்கு அடுத்தபடியாக ஒன்றாரியோ மாகாணத்தில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் சராசரி மாத வாடகை தொகையானது 2332 டாலர்களாக காணப்பட்டது, இது அதற்கு முந்தையRead More →

Reading Time: < 1 minuteபெண் ஒருவரைத் தாக்கி, குழந்தையை தடுத்து வைத்திருந்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஸ்காப்ரோவின் மிட்லான்ட் அவன்யூ மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. றொரன்டோ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியமை குறித்து விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்திருந்தனர். 42 வயதான நபர் ஒருவர் பெண்ணைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து கனடா பொது சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்டாரியோவில் இருந்து 511 பேர், கியூபெக்கில் இருந்து 426 பேர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 98 பேர், ஆல்பெர்ட்டாவில் இருந்து 19 பேர், சாஸ்கத்சிவானில் இருந்து 3 பேர் மற்றும் யுகோன் பகுதியில் இருந்து 2 பேர் என மொத்தம் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக்Read More →

Reading Time: < 1 minuteறொரன்டோவில் மரண சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். றொரன்டோவின் ரிச்மன்ட்ஹில் மயானத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரிச்மன்ட்ன் ஹில் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 26 மற்றும் 27 வயதான இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்காவிலிருந்து, கனடாவிற்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் என்பனவற்றை கடத்திய கும்பலை ஒன்றாரியோ போலீசார் கைது செய்துள்ளனர். கொக்கேய்ன், கண்டேனேல் ஆகிய போதை பொருட்களையும் துப்பாக்கிகளையும் கனடாவிற்குள் கடத்திய கும்பல் ஒன்றையே இவ்வாறு யோர்க் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக 400 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் ஆயுதங்கள் கடத்தும் கும்பல் தொடர்பில் விரிவானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்டு 10ம் திகதிவரையான தரவுகளின் அடிப்படையில் ஆயிரம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு 10ம் திகதி வரையில் கனடாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்ணிக்கை 1008 என தெரிய வந்துள்ளது. ஒன்ராறியோவில் மட்டும் 478 பேர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கியூபெக்கில் 425 பேர்களுக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 85 பேர்களுக்கும், ஆல்பர்ட்டாவில் 16 பேர்களுக்கும், சஸ்காட்செவன் மற்றும் யூகோன் பகுதிகளில் தலா இருவருக்கும்Read More →