Reading Time: < 1 minuteகனடாவுக்குள் அகதிகள் வரும் பாதை ஒன்றை நிரந்தரமாக மூடவேண்டும் என பெடரல் அரசை கியூபெக் மாகாண பிரீமியர் கேட்டுக்கொண்டுள்ளார். அதாவது, கனடா அமெரிக்க எல்லையில் Roxham Road என்றொரு கிராம சாலை உள்ளது. அமெரிக்காவிலிருந்து அகதிகள் அந்த சாலை வழியாக கனடாவுக்குள் நுழைந்துவிடுவதுண்டு. அந்த பகுதி கியூபெக் மாகாணத்தில் ஒன்ராறியோ நகரின் தெற்கே அமைந்துள்ளது. பெருந்தொற்று காலகட்டத்தில் அந்த சாலையில் உள்ள எல்லை கடக்கும் பகுதி பெரும்பாலும் மூடப்பட்டிருந்த நிலையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்ட நிலையில், சாரதி ஒருவர் வாகன பதிவு எண் புதுப்பித்தல் விதி தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒன்ராறியோவின் பிராம்டனில் வசிக்கும் மத்தியாஸ் ரூசோ என்பவர் கியூபெக்கின் Gatineau பகுதியில் பயணித்த நிலையில், அவரது வாகன பதிவு எண் ஏப்ரல் மாதமே காலாவதியானதாக கூறி 489 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்ராறியோ மாகாண நிர்வாகம் வாகன எண் புதுப்பித்தல் கட்டணத்தை ரத்து செய்துள்ள நிலையில், புதுப்பித்தல்Read More →

Reading Time: < 1 minuteகர்ப்பிணி மனைவியை மூழ்கடித்து கொலை செய்த வழக்கில், ரொறன்ரோ மத போதகரின் மேல்முறையீடு இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஜனவரியில் பிலிப் கிராண்டினுக்கு வழங்கப்பட்ட 15 ஆண்டு சிறைத்தண்டனை மீது அவர் முன்னெடுத்த மேல்முறையீடு ஒன்ராறியோவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே கிராண்டினுக்கு பிணையும் அளிக்கப்பட்டது. 2011ல் கிராண்டினின் மனைவி அன்னா கரிஸ்ஸா தங்கள் வீட்டு குளியலறை தொட்டியில் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.Read More →

Reading Time: < 1 minuteரஸ்ய படையினர் உக்ரைனில் மேற்கொண்டு வரும் மனிதாபிமானமற்ற கொடூர செயல்களை கனடா அம்பலப்படுத்தியுள்ளது. உக்ரைன் நகரமொன்றின் விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்களில் ரஸ்ய படையினர் நிலக்கண்ணி வெடிகளை புதைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். உக்ரைனின் இர்பின் நகரில் இவ்வாறு நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜோலி அண்மையில் பிரதரமர் ட்ரூடோவுடன் உக்ரைனுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். நடைபாதைகளில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலி நாணயக் குற்றிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலி நாணயக் குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எழுமாறான அடிப்படையில் நாணயக் குற்றிகள் சோதனையிடப்பட்ட போது அவை போலியானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கனேடிய பொலிஸார் இந்த விசாரணைகளை நடாத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவில் புழக்கத்தில் உள்ள இரண்டு டொலர் நாணயக் குற்றியே இவ்வாறு போலியாக தயாரிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இவ்வாறு புழக்கத்தில் விடப்பட்டRead More →

Reading Time: < 1 minuteதிங்கள்கிழமை இரவு நோர்த் யோர்க் பிளாசாவில் நடந்த ஒரு பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில் தேடப்பட்ட சந்தேக நபர் காரொன்றையும் கணவாடி அங்கிருந்து தப்பிச்சென்றதாக ஒரோன்டோ பொலிசார் கூறுகின்றனர். அதிகாரிகள் முதலில் ஜேன் தெரு மற்றும் வில்சன் அவென்யூவிற்கு அருகிலுள்ள ஷெரிடன் மாலுக்கு இரவு 8:30 மணியளவில் அழைக்கப்பட்டனர். ஷாப்பிங் செய்தபோது நபர் ஒருவர் துப்பாக்கியால் தாக்கப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த கொலை சம்பவத்துக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்,Read More →

Reading Time: < 1 minuteகொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கடுமையான சண்டையால் அழிக்கப்பட்ட நகரமான இர்பினை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உக்ரைனில் அழிக்கப்பட்ட இர்வின் நகரை பார்வையிட்டேன். ரஷ்யாவின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை நான் நேரடியாகக் கண்டேன். கொடூரமான போர்க்குற்றங்களுக்கு விளாடிமிர் புடின் தான் பொறுப்பு என்பதுRead More →

Reading Time: < 1 minuteஅட்வான்ஸ்டு ரிலீஃப் கண் சொட்டுகள் மற்றும் காம்ப்ளிமெண்ட்ஸ் அட்வான்ஸ்டு ரிலீஃப் கண் சொட்டுகள் ஒவ்வொன்றும் பேக்கிங் பிழையின் காரணமாக திரும்பப் பெறப்படுகின்றன. சில பாட்டில்களில் லேபிளில் பட்டியலிடப்படாத பொருட்கள் இருக்கலாம் என ஹெல்த் கனடா கூறுகிறது. பாதிக்கப்பட்ட பாட்டில்களில் அறிவிக்கப்படாத Naphazoline HCl அல்லது கிளிசரின் இருக்கலாம் என்று ஏஜென்சி கூறுகிறது, இது ஒரு ஒவ்வாமை எதிர்வினையை ஏற்படுத்தும், குறிப்பாக முகம், நாக்கு மற்றும் தொண்டையில் சொறி மற்றும் அரிப்புRead More →

Reading Time: < 1 minuteதாவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கனடாவில் ‘மெடிகாகோ’ உயிரிதொழில் நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த தடுப்பூசிகள் சிறப்பாக செயற்பட அவற்றுடன் ‘ஏஎஸ் 03’ என்ற பொருள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் மூன்றாவது கட்ட சோதனை 85 மையங்களில் 24 ஆயிரத்து 141 பேரிடம் நடத்தப்பட்டது. இவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டதில் 165 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எவருக்கும் தீவிரமான கொரோனாRead More →

Reading Time: < 1 minuteஇந்தியா செல்லும் கனேடியர்களுக்கு கனடா அரசு வெப்பம் தொடர்பில் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இந்தியா கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கனடா அரசு, வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ உருவாகியுள்ளதாகவும், மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருக்கும்போது கனேடியர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் புகை சூழ்ந்துள்ள இடங்களை தவிர்க்குமாறும் கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முடிந்தால் பயணத் திட்டங்களில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மையில் இராணுவ கல்லூரி மாணவர்கள் நான்கு பேரின் மரணங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒன்றாரியோ கிங்ஸ்டனில் அமைந்துள்ள றோயல் இராணுவ கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேர் வாகன விபத்தில் அண்மையில் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தில் ஏதேனும் சந்தேகங்கள் காணப்படுகின்றதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், இந்த விபத்துச் சம்பவத்தில் சந்தேகத்திற்கு இடமான எந்தவொரு விடயமும் கிடையாது என விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரையில் நடைபெற்றRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ விமான நிலையத்தின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு விசேட அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவிற்குள் உள்ளே பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் முன்கூட்டியே ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்திற்கு வருகை தர வேண்டுமென கோரப்பட்டுள்ளது. விமான பயண நேரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு சோதனைகளுக்காக இவ்வாறு முன்கூட்டியே வருகை தருமாறு கோரப்பட்டுள்ளது. முன்கூட்டியே வருகை தருவதுடன் பாதுகாப்பு நோக்கங்களின் அடிப்படையிலான சோதனைகளுக்கும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிசுக்கள் மர்மமான முறையில் மரணித்தமைக்கான காரணங்கள் அம்பலமாகியுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த காலத்தில் 1338 சிசுக்கள் மர்மமான முறையில் மரணித்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உரிய முறையில் நித்திரை செய்யாமையினாலேயே இந்த சிசுக்கள் உயிரிழந்துள்ளதாக நீண்ட மருத்துவ ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் சிசுக்களின் மரணத்திற்கான காரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையில் வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டாலும் பாதுகாப்பான முறையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ட்ரோனை பயன்படுத்தி ஆயுதங்கள் கடத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. தென்கிழக்கு ஒன்றாரியோவின் மரமொன்றில் சிக்கியிருந்த நிலையில் இந்த ட்ரோன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோனில் கைத்துப்பாக்கிகள் வைக்கப்பட்டு கடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த ட்ரோன் மரமொன்றில் சிக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிற்கும் – கனடாவிற்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒன்றாரியோவின் லாம்டன் பகுதியில் இந்த சந்தேகத்திற்கு இடமான வகையில் ஆயுதங்களுடன் இந்த ட்ரோன் மீட்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனில் சுமார் பதினொரு கைத்துப்பாக்கிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் எரிவாயு விலை உச்சம் தொடும் என துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். குறிப்பாக றொரன்டோ பெரும்பாக பகுதியில் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வினை பதிவு செய்யும் என தெரிவித்துள்ளனர். எதிர்வரும் புதன்கிழமை எரிவாயு ஒரு லீற்றரின் விலை நான்கு சதத்தினால் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 190.9 சதங்களாக உயர்வடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விலையானது கடந்த மார்ச் மாதம் 10ம்Read More →

Reading Time: < 1 minuteசமீபத்தில் வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு, ஊதியத்தில் பாரபட்சம் என பல்வேறு காரணங்களால் புலம்பெயர்ந்தோர் அமைதியாக கனடாவை விட்டு வெளியேறி வருவதாக ஒரு செய்தி வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில், கனேடிய மாகாணம் ஒன்றில், கனேடியர்களே வீட்டு வாடகை உயர்வை சமாளிக்க முடியாமல் திணறி வருவதாக மற்றொரு செய்தி வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டிஷ் கொலம்பியாவின் மையப்பகுதிக்குச் சென்றால் இலகுவான வாடகையில் வீடுRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த அனைவருமே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். சனிக்கிழமையன்று, ஒன்ராறியோவிலுள்ள Dryden என்ற இடத்திலிருந்து Marathon என்ற நகரம் நோக்கிப் பயணித்த சிறிய ரக விமானம் ஒன்றில் நான்கு பேர் பயணம் செய்துள்ளார்கள். அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் தனது இலக்கைச் சென்றடையாததையடுத்து, உடனடியாக பொலிசார் மீட்புக்குழுவினருடன் அந்த விமானத்தைத் தேடிச் சென்ற நிலையில், Sioux LookoutRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் களவாடப்பட்ட வாகனமொன்று நைஜீரியாவின் நகரமொன்றில் கண்டு பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்றாரியோவைச் சேர்ந்த அஹமட் அப்தல்லாஹ் (Ahmad Abdallah) என்பவரின் எஸ்.யூ.வீ வாகனமொன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காணாமல் போயிருந்தது. இந்த சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்றது. வாகனம் சில நொடிகளில் களவாடப்பட்டு ஓட்டிச் செல்லப்படும் காட்சிகள் கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்தது. எனினும், களவாடியவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை, மிகவும்Read More →