Reading Time: < 1 minuteகனடா முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் தொற்று நோய் பரவல் அதிகரிப்பு ஏற்பட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் தொற்று நோயில் கணிசமான வீழ்ச்சி மற்றும் அதிகரித்த தடுப்பூசி வீதங்களால் நாடு தைரியமடைந்திருந்த நிலையில் மீண்டும் தொற்று நோய் அதிகரிப்பு பதிவாகி வருகின்றமை குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். கனடாவின் அதிக மக்கள்தொகை கொண்ட ஒன்ராறியோ மற்றும் கியூபெக்கில் உள்ளிட்ட மாகாணங்களில் விரைவில் தேர்தல்கள் நடைபெறRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைன் ரஷ்யா போரினால் உலக நாடுகள் சந்திக்க இருக்கும் உணவு மற்றும் எரிசக்தி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு வரும் மாதங்களில் கனடா கண்டிப்பாக உதவி செய்யும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் போரானது அந்த நாடுகளின் பொருளாதாரம், அடிப்படை வசதி மற்றும் உணவு தேவையை மட்டும் பாதிக்காமல், உலக அளவில் உணவு தேவை மற்றும் எரிபொருள் பற்றாக்குறையை உருவாகியுள்ளது. இந்தநிலையில், வரும் மாதங்களில்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணமும், கனேடிய மத்திய அரசும் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு 13.2 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான குழந்தைகள் பராமரிப்புநலத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள முடிவு செய்துள்ளன. குழந்தைகளை பகல் நேரக் காப்பகங்களில் விடும் பெற்றோருக்கு உதவும் வகையில் திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று ஒன்ராறியோ பிரீமியரும், கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவும் இத்திட்டம் குறித்த அறிவிப்பை ஒன்ராறியோ மக்களுக்கு வெளியிட்டார்கள். அதன்படி, ஏப்ரல் 1 முதல், உரிமம் பெற்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிராம்டனில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், மூன்று பிள்ளைகள் உட்பட ஐவர் குடும்பம் மொத்தமாக உடல் கருகி பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவின் பிராம்டனில் திங்களன்று அதிகாலை குறித்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. பலியானவர்கள் தொடர்பில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. திங்களன்று சுமார் 2 மணியளவில் பீல் பிராந்திய பொலிசாருக்கு அவசரRead More →

Reading Time: < 1 minuteமியன்மார் இராணுவ ஆட்சிக்கு ஆயுதங்களை வழங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. சிறப்புப் பொருளாதார நடவடிக்கைகள் (பர்மா) விதிமுறைகளின் கீழ், கனடா இந்த தடைகள் விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து, கனடா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘மியன்மார் மக்களுடன் கனடா ஒற்றுமையாக நிற்கிறது. இந்த ஆட்சி மனித வாழ்வின் கொடூரமான அலட்சியத்தைத் தொடரும் போது நாம் அமைதியாக இருக்கவும் முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனதுRead More →

Reading Time: < 1 minuteஉக்ரைனிலிருந்து போர் காரணமாக அகதிகளாக வெளியேறும் மக்கள் கனடாவில் தங்கலாம் என கனடா அரசு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் குண்டு வீச்சு தாக்குதலால் பல இடங்களில் பதுங்கியிருந்த பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பல மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இனி கொவிட் பரிசோதனை தேவையில்லை! ஜனவரி நடுப்பகுதியில் இருந்து கொவிட்-19 இன் புதிய தொற்றுகள் குறைந்துள்ளதன் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் கூறுகையில், ‘தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு எதிர்மறையான கொவிட்-19 சோதனை முடிவைக் காட்ட வேண்டிய தேவை ஏப்ரல் 1 முதல் இனி தேவைப்படாது. கனடாவின் அதிக தடுப்பூசி விPம் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாழ்க்கைச் செலவு கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்மாதம் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் ஆண்டு பணவீக்கம் 5.7 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 1991க்குப் பிறகு இதுவே அதிகபட்ச வருடாந்திர பணவீக்கமாகும். இதற்கிடையில், பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக ஐந்து சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. பொருட்களின் விலை உயர்வுRead More →