Reading Time: < 1 minuteரொறன்ரோவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். எக்ளிண்டன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வியாழனன்று மதியம் 2 மணிக்கு பின்னர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தொடர்புடைய குடியிருப்பினுள் பொலிசாரை ஒருவர் அனுமதிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த பொலிசார், ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், Omicron அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடு செல்வது தொடர்பில் நிலவும் அபாயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், கனடாவுக்கு வெளியே சூழ்நிலை நன்றாக இல்லை. ஆகவே, நீங்கள் வெளிநாடு பயணம் செல்வது குறித்து திட்டமிட்டால், இப்போதைக்கு அது மிகவும் அபாயமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார் பெடரல் சுகாதாரத்துறை அமைச்சரான Jean-Yves Duclos. அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கனடா திரும்புவோரும்,Read More →

Reading Time: < 1 minuteஉலகிலேயே தண்ணீரில் கழுவினாலும் பாதிக்கப்படாத, மற்றும் வளையும் தன்மை கொண்ட முதல் பேட்டரியை கனேடிய ஆய்வாளர்கள் சிலர் வடிவமைத்துள்ளார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இந்த அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள். இந்த பேட்டரியால், உடலில் அணிந்துகொள்ளக்கூடிய கருவிகள் என்ற விடயம் கிட்டத்தட்ட சாத்தியமாகியுள்ளது என்றும், துணி துவைக்கும்போது மறதியாக ஆடையிலேயே விட்டுவிட்டாலும்கூட இந்த பேட்டரி நீடித்து உழைக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண்கள் நாடாளுமனற்ற உறுப்பினராகி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இது நடந்து 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதை Equal Voice என்ற அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியாக நேற்று ஒட்டாவாவில் நடத்தியது. Equal Voice என்பது கனடாவில் ஆண்களுக்கு பெண்கள் அனைத்து துறையிலும் ஜொலிக்கRead More →

Reading Time: < 1 minuteசீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் சமீபத்திய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா மாறியுள்ளன. சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் எந்த அமைச்சர்களும் பெய்ஜிங் ஒலிம்பிக்கில், கலந்து கொள்ள மாட்டார்கள் என பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். முன்னாள் கன்சர்வேடிவ் தலைவர் இயன் டங்கன் ஸ்மித், முக்கிய விளையாட்டு நிகழ்வை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்க வேண்டுமெ அழைப்புRead More →

Reading Time: < 1 minuteபாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்டத்தை கனடா செனட் சபை அங்கீகரித்துள்ளது. பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்ட மூலம் கனடா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. கன்சர்வேடிவ் கட்சி முன்வைத்த இந்தத் யோசனைக்கு ஆளும் லிபரல் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் இது ஏகமனதாக நிறைவேறியது. ஆளும் லிபரல் கட்சியினர் முதன்முதலில் மார்ச் 2020 இல்Read More →

Reading Time: < 1 minuteரொரன்டோ –ஸ்கார்பரோ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒமிக்ரோன் புதிய திரிபு கொரோனா தொற்றுக்குள்ளாகி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ரொரன்டோ பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். கனடாவில் பாடசாலை ஒன்றில் ஒமிக்ரோன் தொற்று நோயாளி கண்டறியப்பட்ட முதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளது. எனினும் தொற்று உறுதி செய்யப்பட்டவர் மாணவரா? அல்லது பணியாளரா? என்ற விபரம் வெளியிடப்படவில்லை. தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் நெருங்கிய தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்டமூலம், கனடா நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் (மக்கள் சபை) நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் அடுத்தகட்டமாக மேல்சபையான செனட் சபையின் ஒப்புதலைப்பெற வேண்டும். இந்த சட்டமூலம், மேல்சபையிலும் நிறைவேறி சட்டமாகி விட்டால், கனடாவில் யாரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியாது. இந்த சட்ட சட்டமூலத்தை ஆளும் லிபரல் கட்சி மட்டுமல்லாது, எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியினரும் ஆதரித்தனர். இதற்காக கன்சர்வேடிவ்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து ஒன்ராறியோவில் சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது புதிய கொரோனா மாறுப்பாடு தொடர்பில் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், கனடாவின் ஒன்ராறியோவில், இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் என்ணிக்கையை வெளியிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை வெளியான அறிக்கையில், ஒன்ராறியோவில் மட்டும் இதுவரை 10,000 பேர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்தRead More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் புதிய திரிபு பரவலைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் இருந்தும் விமானம் மூலம் வரும் அனைவருக்கும் கொவிட் பரிசோதனை அவசியம் என கனடா அறிவித்துள்ளது. கனடாவில் இதுவரை 07 பேர் ஒமிக்ரோன் புதிய திரிபு வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் தெரிவித்தார். ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ள 7 பேரில் 4 பேர்Read More →