Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுபடுத்த கடுமையான, அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஜனவரியில் தொற்று நோய் தீவிரமடைந்து, மருத்துவமனைகள் அவற்றின் பராமரிப்புத் திறனை இழக்கும் ஆபத்து ஏற்படும் என புதிய மாதிரிக் கணிப்பீடு தெரிவிக்கின்றது. ஒன்ராறியோவின் அறிவியல் ஆலோசனை வல்லுநர்கள் குழுவினர் நேற்று வியாழக்கிழமை புதிய மாதிரிக் கணிப்பீட்டை வெளியிட்டு மாகாணம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துக் குறித்து விளக்கமளித்தனர். இந்தக் கணிப்பீட்டின் பிரகாரம் ஒன்ராறியோவில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸ் திரிபாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் அடுத்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரும் கொரோனா பரவலால் தடைபடும் உணவுப் பொருட்களின் விநியோகம், ஊழியர்கள் தட்டுப்பாடு மற்றும் பாதகமான வானிலை காரணமாக இந்த விலை உயர்வு ஏற்படும் என புதிய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது. வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், சராசரியாக நான்கு பேர் கொண்ட கனடிய குடும்பம் ஒன்று 2022ல் உணவுக்காக $966 கூடுதலாகச் செலவிடRead More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் உருத்திரிபு பரவல் மற்றும் கொரோனா தொற்று நோயாளர் தொகை அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பயணக் கட்டுப்பாடுகளை கருமையாக்குவது குறித்து கனடிய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எல்லைகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி சோதனைகளை விரிவுபடுத்துவது மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மீண்டும் அமுல் செய்வது குறித்து மத்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன், அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை தவிர்க்குமாறு கனடியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குப்Read More →

Reading Time: < 1 minuteஒமக்ரோன் மாறுபாடு முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உலகம் முழுவதும் பரவி வருவதாக உலகச் சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அதைக் கட்டுப்படுத்த நாடுகள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் அதன் தலைமை பணிப்பாளர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். இதுவரை ஒமக்ரோன் மாறுபாடு 77 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மாறுபாட்டைச் சமாளிக்க அந்நாடுகள் போதுமான அளவு செய்யப்படவில்லை என்றும் கவலை வெளியிட்டார். இதேநேரம் இதற்கு முன்னர் பரவிய கொரோனா மாறுபாடுகளை விடRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா Omicron மாறுபாட்டின் சமூக பரவல் காணப்படுவதாகவும், எதிர்வரும் நாட்களில் வேகமெடுக்கும் அபாயம் இருப்பதாகவும் நாட்டின் முதன்மை மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் மருத்துவர் Theresa Tam தெரிவிக்கையில், ஒன்ராறியோவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு காரணம் ஓமிக்ரான் மாறுபாடு என சுட்டிக்காட்டியுள்ள அவர், புதிய ஓமிக்ரான் மாறுபாடானது வேகமாக பரவும் சாத்தியம் அதிகம் எனவும், சமூக பரவலுக்கு அது வழிவகுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மத்தியில் நாளுக்கு 12,000Read More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் தொற்று பரவல் குறித்த அச்சம் காரணமாக கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் பல்லாயிரக் கணக்கான பொதுச் சேவை அலுவலர்கள் அலுவலகத்துக்குத் திரும்பும் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஒன்ராறியோ பொதுச் சேவை துறையினர் மற்றும் ரொரான்டோ நகர பொதுச் சேவை பணியாளர்கள் பல ஆயிரக்கணக்கானோர் தொற்று நோய் நெருக்கடியை அடுத்து தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றக் கோட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தொற்று நோயில் சரிவு ஏற்பட்டதை அடுத்து அவர்களை இந்தப் புத்தாண்டு முதல் அலுவலகத்துக்குRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர். எக்ளிண்டன் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வியாழனன்று மதியம் 2 மணிக்கு பின்னர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் சம்பவங்கள் நடந்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், தொடர்புடைய குடியிருப்பினுள் பொலிசாரை ஒருவர் அனுமதிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த பொலிசார், ஆணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், Omicron அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடு செல்வது தொடர்பில் நிலவும் அபாயங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இந்நிலையில், கனடாவுக்கு வெளியே சூழ்நிலை நன்றாக இல்லை. ஆகவே, நீங்கள் வெளிநாடு பயணம் செல்வது குறித்து திட்டமிட்டால், இப்போதைக்கு அது மிகவும் அபாயமான ஒன்றாகும் என்று கூறியுள்ளார் பெடரல் சுகாதாரத்துறை அமைச்சரான Jean-Yves Duclos. அத்துடன், வெளிநாடுகளிலிருந்து கனடா திரும்புவோரும்,Read More →

Reading Time: < 1 minuteஉலகிலேயே தண்ணீரில் கழுவினாலும் பாதிக்கப்படாத, மற்றும் வளையும் தன்மை கொண்ட முதல் பேட்டரியை கனேடிய ஆய்வாளர்கள் சிலர் வடிவமைத்துள்ளார்கள். பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இந்த அரிய கண்டுபிடிப்பைச் செய்துள்ளார்கள். பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள். இந்த பேட்டரியால், உடலில் அணிந்துகொள்ளக்கூடிய கருவிகள் என்ற விடயம் கிட்டத்தட்ட சாத்தியமாகியுள்ளது என்றும், துணி துவைக்கும்போது மறதியாக ஆடையிலேயே விட்டுவிட்டாலும்கூட இந்த பேட்டரி நீடித்து உழைக்கக்கூடியது என்றும் தெரிவித்துள்ளார்கள். இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண்கள் நாடாளுமனற்ற உறுப்பினராகி 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் அது ஒரு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. கனடாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினராக Agnes Macphail என்பவர் கடந்த 1921ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இது நடந்து 100 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதை Equal Voice என்ற அமைப்பு கொண்டாட்ட நிகழ்ச்சியாக நேற்று ஒட்டாவாவில் நடத்தியது. Equal Voice என்பது கனடாவில் ஆண்களுக்கு பெண்கள் அனைத்து துறையிலும் ஜொலிக்கRead More →

Reading Time: < 1 minuteசீனாவின் பெய்ஜிங்கில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை, இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் சமீபத்திய நாடுகளாக பிரித்தானியா மற்றும் கனடா மாறியுள்ளன. சீனாவில் மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறப்படுவதால் எந்த அமைச்சர்களும் பெய்ஜிங் ஒலிம்பிக்கில், கலந்து கொள்ள மாட்டார்கள் என பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். முன்னாள் கன்சர்வேடிவ் தலைவர் இயன் டங்கன் ஸ்மித், முக்கிய விளையாட்டு நிகழ்வை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்க வேண்டுமெ அழைப்புRead More →

Reading Time: < 1 minuteபாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கும் சட்டத்தை கனடா செனட் சபை அங்கீகரித்துள்ளது. பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை கோரும் சட்ட மூலம் கனடா பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் நிறைவேற்றப்பட்டது. கன்சர்வேடிவ் கட்சி முன்வைத்த இந்தத் யோசனைக்கு ஆளும் லிபரல் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததால் இது ஏகமனதாக நிறைவேறியது. ஆளும் லிபரல் கட்சியினர் முதன்முதலில் மார்ச் 2020 இல்Read More →