Reading Time: < 1 minuteOmicron வகை கொரோனா வைரஸ் உட்பட கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சில கனேடிய பல்கலைக்கழகங்கள், புத்தாண்டில் வகுப்புகள் துவங்கும்போது, வகுப்புகளை ஒன்லைனில் நடத்துவது என முடிவு செய்துள்ளன. குறிப்பாக, Simon Fraser பல்கலைக்கழகம், Northern B.C. பல்கலைக்கழகம் மற்றும் Victoria பல்கலைக்கழகம் ஆகியவை இந்த முடிவை எடுத்துள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா பரவல் அதிகரித்து, அதிலும் Omicron வகை கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத்துவங்கியுள்ளதால், நேற்று இந்த அறிவிப்பைRead More →

Reading Time: < 1 minute2021 ஆம் ஆண்டில் 401,000 வெளிநாட்டினருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கும் இலக்கை கனடா அடைந்துள்ளது. தொற்று நோய் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே கனடா வந்து விதிவிட உரிமை கோரியுள்ளவர்கள் மீது அரசு கவனம் செலுத்தியது. இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கனடா அடைந்துள்ளது என கனடிய குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார். கனடா அதன்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா பரவல் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை அடுத்து கியூபெக் மாகாணத்தில், குடியிருப்புகளிலும் 6 பேர்களுக்கு மேல் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கியூபெக் மக்கள் கிறிஸ்துமஸ் நாளில் 10 பேர்கள் வரையில் ஒன்றாக கூட்டம் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் டிசம்பர் 26ம் திகதி வீடுகளில் 6 பேர்களுக்கு மேல் அல்லது இரண்டு குடும்ப உறுப்பினர்களுக்கு மேல் ஒன்று கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதே கட்டுப்பாடுகளை தனியார் விடுதிகளிலும், உணவகங்களிலும்Read More →

Reading Time: < 1 minuteஒமிக்ரோன் திரிவு அச்சுறுத்தலுக்கு மத்தியில் கனடாவில் மீண்டும் தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் தொற்று நோய் பொருளாதார நிவாரண திட்டங்களை கனடா விரிபுபடுத்தியுள்ளது. தொற்று நோய் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு ஊதியம் மற்றும் வாடகை மானியங்கள் அளிக்கப்படும் என கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொற்று நோய் நெருக்கடியால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மொன்ரியல் நகரில் கொரோனா தொற்றின் ஓமிக்ரான் மாறுபாடு பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து அவசர நிலை மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மொன்ரியல் மேயர் Valérie Plante செய்வாய்க்கிழமை குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். கியூபெக் பிராந்தியம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒரே நாளில் கியூபெக் பிராந்தியத்தில் 5,043 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், மொன்ரியல் நகரில் மட்டும் 1,656 பேர்களுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில் கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த கிறிஸ்மஸ் விடுமுறைக்காலம் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்சிக் கூடங்கள், மதுபான நிலையங்கள் மற்றும் இரவுக் கேளிக்கை கொண்டாட்டம் என்பனவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை உணவகங்கள், கடைகளில் அமர்ந்து உணவருந்துவோர் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் இன்று முதல் நடைமுறைக்கும் வரும் இந்த தற்காலிக கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் திங்களன்று மட்டும் 10,450 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாகாணங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவில் திங்கட்கிழமை ஒரே நாளில் 10,450 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், சிகிச்சை பலனின்றி 13 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் மாகாணங்களில் கட்டுப்பாடுகளை அமுலுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. நாட்டிலேயே கடுமையான கட்டுப்பாடுகளை கியூபெக் மாகாணம் அமுலுக்குRead More →

Reading Time: < 1 minuteகொரோனா பெருந்தொற்றின் புதிய மாறுபாடான ஓமிக்ரான் பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில், கனடாவுக்கு பயணத்தடை விதித்துள்ளது இஸ்ரேல். கனடா, அமெரிக்கா உட்பட 8 நாடுகளுக்கு குறித்த பயணத்தடை பொருந்தும் என திங்களன்று இஸ்ரேல் அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமைச்சரவை கூட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்புக்கு பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரதமர் Naftali Bennett அலுவலகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சிவப்புப்பட்டியலில் இணைத்துள்ளது மிக அரிதான முடிவாகவே பார்க்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மாயமானதாக தேடப்பட்டுவந்த பள்ளி ஆசிரியர் தொடர்பில், அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக Naomi Onotera என்பவர் மாயமான விவகாரத்தில் பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து படுகொலை உள்ளிட்ட இரு பிரிவுகளில் குறித்த ஆசிரியரின் கணவர் மீது வழக்கு பதிந்து, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாயமானதாக கூறப்பட்ட ஆசிரியர் கொல்லப்பட்டு,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மாண்ட்ரீல் (Montreal) பகுதியில் பிறந்து இரண்டு மாத பச்சிளம் குழந்தை ஒன்று கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாண்ட்ரீல் பகுதியில் அமைந்துள்ள Sainte-Justine மருத்துவமனையிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட குழந்தை, பின்னர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 16ம் திகதி சிகிச்சை பலனின்றி குழந்தை மரணமடைந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்து அதிகரித்தது. ஒமிக்ரோன் தொற்று நோயை கட்டுப்படுத்தி மற்றொரு அலையைத் தவிர்க்க கனடா போராடி வரும் நிலையில் இறப்புக்கள் 30,000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த 2020 நவம்பரில் 10,000 கொவிட் இறப்புகளை கனடா எட்டியது. தொற்று நோய் தொடங்கி 9 மாதங்களில் 10,000 மரணங்கள் பதிவாயின. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஜனவரி 2021 இல் இறப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தொழில் துறை ஊழியர்களுக்கான ஒரு மணி நேர குறைந்தபட்ச ஊதியம் டிசம்பர் 29 முதல் 15 டொலர்களாக அதிகரிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. லிபரல் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பொருளாதார செழிப்பு என்பது ஒவ்வொரு கனேடியரும் பொருளாதார ரீதியாக வெற்றிபெறுவதை அடிப்படையாகக் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு 15 டொலர் ஊதிய உயர்வு குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஆயிரக்கணக்கானRead More →