Reading Time: < 1 minuteமுதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை பெற்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு Quebec மாகாணம் மூன்றாவது தடுப்பூசியை வழங்கவுள்ளது. AstraZeneca தடுப்பூசியைப் பெற்ற முழு தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் பயணம் செய்வதற்கு முன் mRNA தடுப்பூசியை மூன்றாவதாக பெறலாம் என Quebec அரசாங்கம் அறிவித்தது. Serum Institute of Indiaவில் தயாரிக்கப்பட்ட AstraZeneca தடுப்பூசியை சில நாடுகள் அங்கீகரிக்காததால் இந்த முடிவை Quebec மாகாண பொது சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆயிரத்து 155பேர் பாதிக்கப்பட்டதோடு ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 27ஆயிரத்து 370பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 553பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்தாயிரத்து 061பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆளுநர் நாயகமாக பழங்குடி இனுக் சமூகத்தைச் சேர்ந்த மேரி சைமன் பதவியேற்றார். இதன்மூலம் கனடா வரலாற்றில் ஆளுநர் நாயகம் என்ற உயரிய பதவியை வகிக்கும் முதல் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராக மேரி சைமன் சாதனை படைத்துள்ளார். நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற காலாசார மற்றும் பாரம்பரிய நிகழ்வுகளைத் தொடர்ந்து கனடாவின் 30-ஆவது ஆளுநர் நாயாகமாக அவா் பதவியேற்றுக்கொண்டார். இனுக் பழங்குடி சமூக முக்கிய தலைவரும் முன்னாள் டென்மார்க்கிற்கான கனேடிய தூதராகப்Read More →

Reading Time: 2 minutesதென்மராட்சி நிறுவனம் – கனடாவின் நிர்வாகிகளிற்கான ஒன்று கூடல் யூலை 24, 2021 அன்று புதிய தலைவர் திரு.தேவதாஸ் சண்முகலிங்கம் தலைமையில் ஸ்ரோவிலில் (Stouffville, Ontario, Canada) நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள், ரொறோன்ரோவின் முன்னணி ஊடகங்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிறுவனம் 1993 ஆண்டு முதல் தென்மராட்சி மக்களிற்கு சேவையை ஆற்றிவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக தொடர்புகளுக்கு தலைவர்S. தேவதாஸ் (தாஸ்)416-817-1114 தென்மாட்சி நிறுவனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 228பேர் பாதிக்கப்பட்டதோடு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 26ஆயிரத்து 215பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 547பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 637பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஎல்லைகளை மீண்டும் திறந்து சர்வதேச பயணிகளை வரவேற்க கனடா தயாராகி வரும் நிலையில் ரொரண்டோ – பியர்சன் விமான நிலையம் மற்றும் வான்கூவர் சர்வதேச விமான நிலையம் ஆகியன தடுப்பூசி நிலையின் அடிப்படையில் பயணிகளுக்கான தனித்தனி வரிசைகளை செயற்படுத்த தயாராகி வருகின்றன. முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டவர்களின் பயணத்தை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் வகையில் சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த நடவடிக்கை தடுப்பூசிகளை விரைவாகப்Read More →

Reading Time: < 1 minuteடோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்த பெண்களுக்கான நீச்சல் போட்டியில் கனடா அணி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. கனடாவின் Penny Oleksiak தலைமையிலான இந்த அணி 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் 3:32.78 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடம் பிடித்துள்ளது. அவுஸ்திரேலியா அணி 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து உலக சாதனை படைத்துள்ளது. அமெரிக்க அணி (3:32.81) 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. இதனையடுத்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 605பேர் பாதிக்கப்பட்டதோடு 13பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 14இலட்சத்து 25ஆயிரத்து 702பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 26ஆயிரத்து 539பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 551பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 244பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அத்துடன்Read More →