Reading Time: < 1 minuteதொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியிலும் இவ்வாண்டு ஜனவரியில் சுமார் 24,665 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை கனடா வரவேற்றுள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தொற்றுநோய்க்கு முன்னராக காலப்பகுதியில் கனடா மாதாந்தம் வரவேற்ற புதிய குடியிருப்பாளர்களுக்கு நிகராக இது அமைந்துள்ளது. தொற்றுநோய்க்கு முன்னர் கனடா மாதத்திற்கு 25,000 முதல் 35,000 புதிய குடியேற்றவாசிகளை வரவேற்றது. கனடா கடந்த ஆண்டு மார்ச் 18-ஆம் திகதி முதல் கொரோனா வைரஸின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைRead More →

Reading Time: < 1 minuteசிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது. தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா மற்றும் கனடாவில் கோவிட்-19 தடுப்பூசி போடும் செயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் கோடையில் இரு நாடுகளின் எல்லைகளை மீண்டும் திறக்க வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுடன் இணைந்து இந்தக் கோடை காலத்தில் எல்லைகளை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோ பைடனுக்கு நியூயோர்க்கை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்கா காங்கிரஸ் பிரதிநிதி பிரையன் ஹிக்கின்ஸ்Read More →

Reading Time: < 1 minuteகோவிட்19 தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு கனடாவில் இறப்பு வீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட சராசரியை விட 13,798 அதிகப்படியான இறப்புகள் பதிவாகியுள்ளதாக கனடா புள்ளிவிவரவியல் பிரிவு நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020-ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை கனடாவில் மொத்தம் 296,373 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது எதிர்பார்க்கப்பட்ட சராசரி வருடாந்த இறப்பு வீதத்தை விட 5 வீதம் அதிகமாகும்Read More →

Reading Time: < 1 minuteபொது பிரிட்டிஷ் கொலம்பியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நேரில் கற்றல் வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேம்பட்ட கல்வி மற்றும் திறன் பயிற்சி அமைச்சர் அன்னே காங், மாகாண சுகாதார அதிகாரி டாக்டர் போனி ஹென்றி, அனைத்து பொது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கு இந்த செப்டம்பரில் வளாகக் கல்விக்கு முழுமையாக திரும்பத் தயாராகுமாறு அறிவுறுத்தியதாக கூறினர். அன்னே காங், இந்த வளர்ச்சியை ஊக்கமளிக்கும் என்று சொன்னாலும், சிலர் திரும்பிச்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பது இலட்சத்தைக் அண்மிக்கின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் எட்டு இலட்சத்து 96ஆயிரத்து 739பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 22ஆயிரத்து 335பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 221பேர் பாதிக்கப்பட்டதோடு 31பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 442பேர்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் உள்ள 300க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் இந்த வாரம் முதல் கொவிட்-19 தடுப்பூசியை வழங்கவுள்ளன தெற்கு ஒன்றாரியோ முழுவதும் அமைந்துள்ள மருந்தகங்களின் முழு பட்டியலையும் மாகாண அரசாங்கம் வெளியிட்டது. அந்த மருந்தகங்கள் 60 முதல் 64 வயதிற்குட்பட்ட ஒன்றாரியர்களுக்கு அஸ்ட்ராஸெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அளவை வழங்கும். குறிப்பிட்ட வயதுடையவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால், கனடாவின் நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய ஆலோசனைக் குழு அந்த வயதினருக்கான செயற்திறன் குறித்த வரையறுக்கப்பட்ட தகவல்கள்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய இராணுவத்தின் துணைத் தளபதியாக முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினென்ட் ஜெனரல் பிரான்சிஸ் ஆலன் பாதுகாப்பு படைகளின் துணைத் தளபதியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அட்மிரல் மெக்டொனால்ட் மற்றும் ஜெனரல் ஜொனாதன் வான்ஸ் ஆகிய இரு மூத்த கனேடிய இராணுவ அதிகாரிகள் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக கனேடிய படைகளின் தேசிய புலனாய்வு துறையின் விசாரணைக்கு முகம் கொடுத்து வரும் நிலையில்Read More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க் பகுதியில் கூரிய ஆயுதத்ததால் குத்தப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை 70 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காலை 11.30 மணிக்கு இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் அவசர பிரிவுக்கு அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திலேயே 70 வயதான நபர் சடலமாகக் காணப்பட்ட நிலையில், மற்றவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் தன்னைத் தானே குத்திக்Read More →

Reading Time: < 1 minuteகனடா – பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள முதியோர் பராமரிப்பு மையமொன்றில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் கோவிட்19 தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் அந்த இல்லத்தில் பல முதியவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போடப்பட்டாலும் கூட பராமரிப்பு மையங்களில் மற்றொரு கொத்தணித் தொற்று உருவாகும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் அவசியம் என பிரிட்டிஷ் கொலம்பியா தலைமை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் போனி ஹென்றிRead More →