Reading Time: < 1 minuteகனடாவில் மிக அதிக வயதான பெண்ணான ஃபிலிஸ் ரிட்வே தனது 114-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில் ரொரண்டோவில் தனது முதல் கோவிட்19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். 1907 மார்ச் 10, இல் பிறந்த ஃபிலிஸ் ரிட்வே பைசர் கோவிட்19 தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை ரொரண்டோ சன்னிபிரூக் மருத்துவமனை தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டபின்னர் கருத்து வெளியிட்ட ஃபிலிஸ் ரிட்வே, “இது எனக்கு கிடைத்த மிகச் சிறந்த பிறந்தRead More →

Reading Time: < 1 minuteகனேடியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே கனடா – அமெரிக்கா எல்லைகளை திறப்பது திறப்பது குறித்துத் தீா்மானிக்கப்படும் என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளின் செயல் திறன், தொற்று நோய் வீதம் ஆகியவை குறித்து ஆராய்ந்து, சுகாதார நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே எல்லைகளை மீளத் திறப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார். அமெரிக்கர்களுக்கு அதிகளவான தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கூட அங்கு தினமும் 50 ஆயிரம்Read More →

Reading Time: < 1 minuteமிடில்செக்ஸ்-லண்டன் சுகாதார பிரிவு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) சமூகத்தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவு புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, மார்ச் 2 முதல் மார்ச் 6ஆம் திகதி வரை நடத்தப்பட்ட குறைந்தது 10 பிந்தைய இரண்டாம் நிலை மாணவர் கொண்டாட்ட விருந்துகளின் விளைவாக இந்த பரவல் உள்ளது. கூட்டங்கள் அனைத்தும் தனியார் வீடுகளில் நடத்தப்பட்டவை, வெஸ்டர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நோய்த்தொற்றில் ஈடுபட்ட மூன்று மாணவர்கள் வளாகத்தில் வாழ்கின்றனர்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஒன்பது இலட்சத்து மூவாயிரத்து 233பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 22ஆயிரத்து 404பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், மூவாயிரத்து 476பேர் பாதிக்கப்பட்டதோடு 33பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 781பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteஅல்பர்ட்டாவில் வழங்கப்படும் கோவிஷீல்ட் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் தற்போதைய அளவுகள் சில ஐரோப்பிய நாடுகளில் ஒரு தடுப்பூசியுடன் இணைக்கப்பட்டுள்ள பக்கவிளைவு பிரச்சினைகளுடன் இணைக்கப்படவில்லை என மருத்துவர் தீனா ஹின்ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ஹெல்த் கனடாவால் அஸ்ட்ராஸெனெகாவுக்கு சமமாகக் கருதப்படும் சீரம் இன்ஸ்டிடியூட் ஒஃப் இந்தியா தயாரித்த தடுப்பூசியின் அடையாளப் பெயரான கோவிஷீல்ட்டை நாங்கள் தற்போது பயன்படுத்துகிறோம். தடுப்பூசியுடன் தொடர்புடையதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் அரிய நிகழ்வுகளைக் கண்டறியRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்குக் கிடைக்கும் தடுப்பூசிகளில் மேலதிகமாக உள்ளவற்றை லிபரல் அரசாங்கம் ஏழை நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது. அத்துடன், அந்த முயற்சி குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. கோவிட்19 தொற்று நோயால் ஏற்பட்டுள்ள சர்வதேச அளவிலான மனிதாபிமான நெருக்கடி குறித்து கனடா பொதுமன்றத்தின் வெளியுறவு விவகாரக் குழுவின் அறிக்கையில் 10 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதில் மேலதிக தடுப்பூசிகளை வளரும்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா ஒன்றுகூடுதல் வரம்புகள் இப்போது வெளிப்புற வருகைகளுக்கு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் போனி ஹென்றி தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியர்கள் இப்போது 10 பேர் கொண்ட குழுக்களாக ஒரு வெளிப்புற அமைப்பில் உடனடியாக செயற்பட முடியும் என அவர் கூறினார். இவர்கள் அதே 10 ஆட்களாக இருக்க வேண்டும். எனவே, நீங்கள் அதை சீராக வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர் ஹென்றி குறிப்பிட்டார். உட்புற ஒன்றுகூடுதல் விதிகளுக்கு எந்த புதுப்பிப்பும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மூவாயிரத்து 018பேர் பாதிக்கப்பட்டதோடு 36பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 99ஆயிரத்து 757பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 371பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30ஆயிரத்து 672பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 549பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைRead More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் நுழைந்த நபருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் திகதி கோரே ஹர்ரன் என்பவர் கைகளில் ஆயுதங்களுடன் நுழைந்த போது அவர் கைது செய்யப்பட்டார். அப்போது வீட்டில் பிரதமரோ, குடும்பத்தினரோ இல்லை என்ற போதிலும்ட, அவர் மீது பிரதமர் வீட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து, பிரதமரை அச்சுறுத்த முயற்சித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகோவிட்19 தொற்று நோயால் இறந்தவர்களை நினைவு கூரும் தேசிய நினைவு தினம் இன்று கனடாவில் அனுஷ்டிக்கப்பட்டது. கோவிட்-19 தொற்று நோய் பெருந்தொற்றாக உலக சுகாதார அமைப்பால் பிரகடணப்படுத்தப்பட்டு இன்று ஓரு வருடம் நிறைவு பெற்றது. இதனையொட்டி இந்நாள் கனடாவில் தேசிய நினைவு நாாளக பிரகடணப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கோவிட்19 தொற்று நோயால் இறந்தவர்களை நினைவுகூர்ந்து நேற்று பொதுமன்றத்தில் பேசிய கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, மார்ச் 11, 2020 கனடாவில் வாழ்க்கையைRead More →