Reading Time: < 1 minuteரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில், மோசடி செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழைக் காண்பித்து பயணம் செய்ய முயன்ற ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 8 ஆம் தேதி இரவு 7 மணியளவில் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். கனடா எல்லை சேவைகள் முகமை அதிகாரியும் சுகாதார அதிகாரியும், சோதனை மேற்கொண்டபோது, கொரோனா பரிசோதனை ஆவணம் மோசடியானது என்று கண்டுபிடித்தனர். நேர்மறையான சோதனை முடிவு, எதிர்மறையான முடிவு என்று அதில் மாற்றம்Read More →

Reading Time: < 1 minuteரொரன்ரோ நகரம் முழுவதிலும் உள்ள ஒன்பது பெரிய மருந்தகங்களில், வாரத்திற்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கொரோ தடுப்பு ஊசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் மீண்டும் போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதும், இந்த மருந்தகங்கள் திறக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி , பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலேயே தடுப்பூசிகளைப் பெற முடியும் என்றும் ரொறன்ரோ மேயர் ஜோன் ரொறி (John Tory) தெரிவித்துள்ளார். பெரிய தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்க இந்தியா உதவும் என கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கனேடியப் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று இந்த உறுதிமொழியை இந்தியப் பிரதமர் நேற்று வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பூசிகளை சொந்தமாகத் தயாரித்துள்ள இந்தியா, உலகில் தடுப்பூசியின் முக்கிய விநியோகத்தராக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேநேரம் கனடா சொந்த தடுப்பூசி உற்பத்தி வசதிகளைக் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 185பேர் பாதிக்கப்பட்டதோடு 95பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 13ஆயிரத்து 982பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 004பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 38ஆயிரத்து 242பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 672பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteலோயர் மெயின்லேண்டில் (Lower Mainland) ஆழமான உறைபனி காற்று வீசுவதால், வீடற்றவர்கள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு போதுமான இடங்கள் அல்லது ஆதரவுகள் இல்லை போன்ற நிலை நிலவுகின்றது. வன்கூவர் நகரம் கடுமையான குளிர் காரணமாக ஏழு கூடுதல் தங்குமிடங்கள் மற்றும் கதகதப்பு மையங்களைச் செயற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த இடங்களை எப்போதும் அணுக எளிதானது அல்ல. மக்கள் அந்த இடங்களுக்குச் செல்வது அல்லது அவர்கள் ஓரங்களில் அல்லது சிலRead More →

Reading Time: < 1 minuteநில எல்லைகள் வழியாக கனடாவுக்குள் நுழையும் எவருக்கு எதிர்மறை கொவிட்-19 சோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல், நில எல்லையில் நபர் கடக்கும் 72 மணி நேரத்திற்குள் எதிர்மறை பி.சி.ஆர் சோதனை எடுக்கப்பட வேண்டும். கனடாவுக்கு விமானம் மூலம் வரும் அனைத்துப் பன்னாட்டுப் பயணிகளுக்கும் இந்த தேவை ஏற்கனவே உள்ளது. கனடாவின் நில எல்லைகளில் புதிய சோதனைத் தேவை கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிகப் பெரிய விமான நிறுவனமான “ஏர் கனடா” அதன் 1,500 பணியாளர்களை விரைவில் பணி இடைநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கனடாவில் புதிய பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பல விமான சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடுத்து “ஏர் கனடா” இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை கனடா விதித்துள்ளது. அத்துடன், மெக்ஸிகோ மற்றும் அனைத்து கரீபியன் பகுதிகளுக்கான விமான சேவைகளையும் ஏப்ரல்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்பு இது சரியான நேரம் அல்ல என, நகரின் உயர்நிலை மருத்துவர் ஈலின் டி வில்லா (Eileen De Villa) தெரிவித்துள்ளார். அத்துடன் ரொறன்ரோவில் திரிபடைந்த கொரோனா தொற்றாளர்கள் மேலும் பலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது, புதிய தொற்றுப் பரவலுக்கான அறிகுறியாக இருக்கும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் தொற்றுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ரொறன்ரோ, பீல், யோர்க்Read More →