Reading Time: < 1 minuteகொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடை எதிர்வரும் மார்ச் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாடுகளுக்கு இடையிலான அத்தியாவசியமற்ற பயணத் தடை நாளை(ஞாயிற்றுக்கிழமை) வரை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தொற்றுநோய் காரணமாக மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. 11-வது தடவையாகவும் தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு இடையிலான எல்லை மூடப்பட்டு முழுதாக ஒரு வருடம் ஆகவுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதென்னாபிரிக்காவில் ஜோன்ஸன் அண்ட் ஜோன்ஸன் நிறுவன கொரோனா தடுப்பூசி போடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுகாதாரத்துறையினர் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஜனாதிபதி சிரில் ராமபோசா மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்வேலி மிகைஸ் ஆகியோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்துதெரிவித்த ஜனாதிபதி சிரில் ராமபோசா, ‘ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பாதுகாப்பான மற்றும் செயற்திறன் மிக்கதாக விரிவான சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரப்Read More →

Reading Time: < 1 minuteசொத்து வரி உயர்வுக்கு டொரோண்டோ நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது. டொராண்டோ நகர சபை 2021 ஆம் ஆண்டிற்கான பெரும்பாலான சொத்துக்களில் 0.7% சொத்து வரி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அதிகரிப்பினால் சராசரி வீட்டு உரிமையாளர்கள் ஆண்டுக்கு $69 டாலர்கள் அதிகமாக செலுத்தவேண்டி இருக்கும். நகர கட்டிட நிதிக்கு பயன்படுத்தப்படும் வரியும் இதில் அடங்கும், இது ஏற்கனவே 1.5% ஆக நிர்ணயிக்கப்பட்டது. நகரத்தின் கட்டிட நிதி போக்குவரத்து மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இவ்வருடம் ஜூன் மாத இறுதிக்குள் குறைந்தது 14.5 மில்லியன் கனேடியர்களுக்கு பைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா கோவிட்19 தடுப்பூசிகளைப் போட முடியும் என எதிர்பார்ப்பதாக தடுப்பூசி விநியோக தேசிய செயற்றிட்டத்திற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் டேனி ஃபோர்டின் (Dany Fortin) தெரிவித்துள்ளார்.. கோவிட்19 தடுப்பூசித் திட்டங்கள் தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட அட்டவணையை நேற்று கனடா மத்திய அரசு வெளியிட்டது. இந்த உத்தேச அட்டவணையை வெளியிட்டு கருத்து வெளியிடும்போதே டேனி ஃபோர்டின் இவ்வாறுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் மூவாயிரத்து 315பேர் பாதிக்கப்பட்டதோடு 63பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 37ஆயிரத்து 497பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 498பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 32ஆயிரத்து 587பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 594பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோயால் கடந்த ஆண்டு 355,000க்கும் மேற்பட்டோர் வேலைகளை இழந்ததாக ஒன்ராறியோவின் நிதி கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. நிதி இழப்பீட்டு அதிகாரி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், வேலை இழப்புகள் பதிவின் மிகப் பெரிய வருடாந்திர சரிவைக் இது குறிக்கின்றது என்று கூறுகிறது. வேலை இழப்புகளுக்கு மேலதிகமாக, 765,000க்கும் மேற்பட்ட ஒன்ராறியோவில் வசிப்பவர்கள் தொற்றுநோயால் குறைவான மணிநேரம் வேலை செய்ததாக அறிக்கை கூறுகிறது. இளைஞர்களின் வேலையின்மை 22 சதவீதமாகRead More →

Reading Time: < 1 minuteரொறொன்ரோவில் வசிப்பவர்கள் நகரத்தின் தற்போதைய கட்டுப்பாடுகளில் இருந்து தப்பிக்க பிக்கரிங்கிற்கு வருவது கவலை அளிப்பதாக பிக்கரிங் மேயர் டேவ் ரியான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சாதாரண சூழ்நிலைகளில், எங்கள் கதவுகள் சுற்றுலாப் பயணிகளுக்கும், உள்ளூர் கடைகள் மற்றும் பிக்கரிங்கின் உணவகங்களை அனுபவிக்கும் பார்வையாளர்களுக்கும் திறந்திருக்கும். ஆனால், இப்போது தொற்றுநோய்களின் போது அல்ல் நாங்கள் எங்கள் சமூகத்தை பாதுகாக்க வேண்டும். மக்கள் மண்டலங்களுக்கு இடையில் பயணிப்பதைத் தடுக்க உத்தியோகபூர்வRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்களில் தற்போதைய கடுமையான முடக்க நிலையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். நகரத்தில் மூன்றாவது அலை கொரோனாவை தவிர்க்க இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார். மாகாணத்தால் அங்கீகரிக்கப்பட்டால், ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்கள் மார்ச் 9 வரை முழு முடக்க நிலையில் இருக்கும். தற்போது ரொறன்ரோ மற்றும் பீல் பிராந்தியங்கள் பிப்ரவரி 22 வரை முழு முடக்க நிலையில்Read More →