Reading Time: < 1 minuteகடுமையான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு கனேடியர்களை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரித்துள்ளார். வெளிநாடுகள் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கோரும் மத்திய அரசின் பொது சுகாதார வழிகாட்டுதலை நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரூடோ மீண்டும் அழுத்தமாக வலியுறுத்தினார். வேகமாகப் பரவக்கூடிய கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகள் பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பயணக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்கும் நடவடிக்கையையில் கனேடிய மத்திய அரசுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 47 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை மேலும் 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 224 குணமடைந்துள்ளதுடன் 90 ஆயிரத்துRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட விசாவை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கத்தார் வழியாக கனடா செல்ல முற்பட்ட வேளையில், கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கண்டி பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான வர்த்தகர் என்பது தெரிய வந்துள்ளது. கத்தார் நாட்டின் டோஹாவிற்கு செல்லவிருந்த QR 669 ரக விமானத்தில் பயணிப்பதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteCOVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான பயண கட்டுப்பாடுகள் குறித்து கனடிய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். வெளிநாடுகளில் அத்தியாவசியமற்ற பயணங்களிலிருந்து திரும்பும் விமான பயணிகளுக்கு கட்டாய விடுதி தனிமைப்படுத்தலும் இதில் அடங்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. புதிய பயண கட்டுப்பாடுகளை முன்னறிவிப்பின்றி கனடா விதிக்கக்கூடும் என கனடிய பிரதமர் Justin Trudeau கடந்த வாரம் அறிவித்திருந்தார்Read More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாண அரசாங்கம் தனது இரண்டாவது அவசரகால நிலை உத்தரவு மற்றும் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவை மேலும் இரண்டு வாரங்கள் நீடித்துள்ளது. அவசர நிலை மற்றும் வீட்டில் தங்கும் உத்தரவுகள் பெப்ரவரி 09-ஆம் திகதிவரை நீடிக்கப்படுவதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் தெரிவித்தார். ஒன்ராறியோவில் கடந்த ஜனவரி 12-ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இரண்டாவது அவசர கால நிலை அறிவிப்பைத் தொடர்ந்து மாகாணத்தில் உள்ளவர்கள் அத்தியாவசியRead More →

Reading Time: 3 minutesகனடாவில் முதியோர் நீண்டகால பராமரிப்பு மைய கட்டமைப்புக்களில் உள்ள தோல்விகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். கனேடிய பொதுமன்ற அமர்வில் நேற்று மெய்நிகர் வழியில் பங்கேற்றுப் பேசும்போதே அவா் இவ்வாறு வலியுறுத்தினார். கனடாவில் முதியோர் நீண்டகால பராமரிப்பு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் ஆயிரக்கணக்கான முதியவர்கள் இறந்துள்ளதுடன், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய பிறழ்வுகளுக்கு எதிராக தங்களது தடுப்பூசி சிறப்பாகச் செயலாற்றுவதாக நம்புவதாக மொடர்னா தடுப்பூசி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் நோயெதிர்ப்புத் திறனைப் பாதிக்கும் என நம்பப்படும் தென்னாபிரிக்காவில் பரவும் புதிய திரிவு வைரஸ் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட பரிசோதனைகள் நடைபெறும் எனவும் மொடர்னா அறிவித்துள்ளது. பிரிட்டனில் காணப்படும் திரிவு கொரோனா வைரஸூக்கு எதிராக மொடர்னா தடுப்பூசி செயலாற்றுகிறது. சிறப்பான நோயெதிர்ப்புத் திறனை உறுதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கணவனின் கனவில் வந்த எண்களைக் கொண்டு லொட்டரி வாங்கிய பெண்ணுக்கு 60 மில்லியன் டொலர் பரிசு விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் டொரோண்டோவில் வசிப்பவர் Deng Pravatoudom, வயது 57. இவர் 1980-இல் தனது 14 உடன்பிறப்புகளுடன் லாவோஸிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தார். பல தசாப்தங்களாக, அவரும் அவரது கணவரும் தங்கள் குடும்பத்தை ஆதரிக்க கடுமையாக உழைத்து வந்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இந்த பெண்ணின் கணவனின் கனவில்Read More →