Reading Time: < 1 minuteரொறன்ரோவின் வெளிப்புற பனிச்சறுக்கு களங்கள் மாத இறுதியில் திறக்கப்பட்டு என மேயர் டோரி தெரிவித்துள்ளார். பனிச்சறுக்குக் களங்கள் கொள்திறன்களையும் இட ஒதுக்கீடு முறையையும் குறைக்கும். ஆனாலும், ரொறன்ரோவின் இயற்கை மற்றும் செயற்கைப் பனிச்சறுக்குக் களங்கள் அனைத்தும் திறக்கப்படும். ரொறன்ரோவின் செயற்கை பனிச்சறுக்குக் களங்களும் திறக்க தயாராகி வருகின்றன. மொத்தத்தில், 54 வெளிப்புற பனிச்சறுக்குப் பகுதிகள் பொதுமக்களுக்கு கிடைக்கும். எந்த நேரத்திலும் அதிகபட்ச திறன் 25 பேருக்கு என அமைக்கப்படும். இணையத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 022பேர் பாதிக்கப்பட்டதோடு, 92பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 47ஆயிரத்து 466பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 710பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 58ஆயிரத்து 524பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 449பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minuteகிறிஸ்மஸ் நெருங்கிவரும் நிலையில், ஒன்றாரியோவின் விடுமுறை வழிகாட்டுதல்களை முதல்வர் டக் ஃபோர்ட் அறிவித்துள்ளார். அனைத்து ஒன்றாரியர்களும், தங்கள் பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல், விடுமுறை நாட்களை தங்கள் நெருங்கிய குடும்ப வீட்டு உறுப்பினர்களுடன் மட்டுமே கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தனியாக வசிப்பவர்கள் வேறு ஒரு குடும்பத்துடன் சேரலாம். நீங்கள் தனியாக வசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் வேறு ஒரு வீட்டில் சேரலாம். எனவே விடுமுறை நாட்களில் நீங்கள் தனியாக இருக்க மாட்டீர்கள் என்று அவர் கூறினார்.Read More →

Reading Time: < 1 minuteவிடுமுறைக் காலம் நெருங்கி வரவிருப்பதால் கனடியர்களை தங்கள் குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நேற்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை அத்தியாவசியமானவற்றுக்கு மட்டுப்படுத்துவது, தனிமனித நடவடிக்கைகளை தற்போதுள்ள நம்Read More →

Reading Time: < 1 minuteசஸ்காட்செவனில் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயோதிபர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை வேறு எந்த வயதினரையும் விட மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பராமரிப்பு இல்லங்களில் வைரஸ் தொற்று வீதம் அதிகரித்துவரும் நிலையில், இந்த அதிகரிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்திய வெளியான மாகாண புதுப்பித்தலின் படி, 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரிடையே ஒட்டுமொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 213 ஆகும். இது ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததைவிட 69Read More →

Reading Time: < 1 minuteமுடக்கநிலையை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான அல்பர்ட்டா மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று மூன்றாவது முறையாக அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மாகாணத்தின் சுகாதாரப் பாதுகாப்பு முறை ஏற்கனவே பேரழிவின் விளிம்பைத் தாண்டிவிட்டதாகக் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும், கொவிட்-19 தொற்று மேலும் பரவாமல் தடுக்க கூடுதல் கட்டுப்பாடுகளுடன் விரைவாக செயற்படுமாறு அதிகாரிகளை வலியுறுத்துகின்றனர்.341 மருத்துவர்கள் கையெழுத்திட்ட கடிதத்தில் ஒரு முடக்கநிலை கடுமையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுகளின் தொடர்ச்சியான உயர்வு மாகாணத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் தொழிலாளர்களுக்கு நிலையானது அல்லRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், நான்காயிரத்து 792பேர் பாதிக்கப்பட்டதோடு, 49பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 30ஆயிரத்து 503பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11ஆயிரத்து 445பேர் உயிரிழந்துள்ளனர் மேலும், 54ஆயிரத்து 999பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 431பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Read More →

Reading Time: < 1 minuteஇரண்டாவது கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றலையை வெல்ல தங்களுக்கு உதவுமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ரைடோ காட்டேஜுக்கு வெளியே இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நாட்டின் தொற்று எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஒரு குளிர்காலத்தை எதிர்கொள்கிறோம். இது மக்களை மேலும் மேலும் உள்ளே செல்லச் செய்கிறது. மேலும் தொற்றுபாதிப்புகள் அதிகரித்து மருத்துவமனைகள் நிரம்பி,Read More →