Reading Time: < 1 minuteதெற்கு அல்பர்ட்டாவில் ஐந்து பாடசாலைகளில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்ல்வுட் பாடசாலை, செயின்ட் ஏஞ்சலா பாடசாலை மற்றும் கல்கரியில் உள்ள லெஸ்டர் பி. பியர்சன் உயர்நிலைப் பாடசாலை, ரேமண்டில் உள்ள ரேமண்ட் உயர்நிலைப் பாடசாலை மற்றும் கன்மோர் நகரில் உள்ள லாரன்ஸ் கிராஸி நடுநிலைப் பாடசாலை ஆகியவற்றில் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்று பரவுவதற்கான அபாயத்தைக் கட்டுப்படுத்த பாடசாலைகளுடன் நேரடியாகப் பணியாற்றி வவருதாக அல்பர்ட்டாRead More →

Reading Time: < 1 minuteகொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில், மெதுவான ஆனால் நிலையான அதிகரிப்பு கவலையாக உள்ளதாக தலைமை பொது சுகாதார மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் சராசரியாக தினசரி சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது முந்தைய வாரத்தை விட 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இது தினசரி சராசரியாக 435 ஆக இருந்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு 390 ஆகும். ஒட்டுமொத்தமாக, கடந்த வாரத்தில், கனடாRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 400பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 2பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 25ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 31ஆயிரத்து 895பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 145பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆறாயிரத்து 393பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து 16ஆயிராயிரத்து 357பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteகுழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில நிறுவனங்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன் வடிவங்களுடன் கசக்கிப் பைகளில் கைச் சுத்திகரிப்பான்களை பொதியிடுகின்றன. கசக்கிப் பைகள் பொதுவாக பழ ப்யூரி தின்பண்டங்கள் அல்லது குழந்தைகளுக்கான சாறுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை கண்காணிக்கப்படாவிட்டால், சில குழந்தைகள் ஆல்கஹால் சார்ந்த தயாரிப்பு மற்றும் சிற்றுண்டியைப் பற்றி எளிதில் குழப்பமடையக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஅரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதிலிருந்து, 87 சதவீத அமெரிக்கர்கள் (16,070) கனடாவுக்குள் நுழைய முயன்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மார்ச் 22ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 2ஆம் திகதிக்கு இடையில், கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (சிபிஎஸ்ஏ) 18,431பேரைத் திருப்பி அனுப்பியுள்ளது. அமெரிக்காவிலிருந்து படகு, நிலம் மற்றும் விமானம் மூலம் பயணிக்க முயன்ற வெளிநாட்டினர் இதில் அடங்கும். இவ்வாறு முயற்சித்த சுமார் 5,300 பயணிகள் திரும்பிச் செல்ல மிகப்பெரிய காரணமாக சுற்றுலாRead More →

Reading Time: < 1 minuteநடப்பு ஆண்டில் இதுவரை காலப்பகுதியில் 364 செல்லப்பிராணி மோசடி புகார்களைப் பெற்றுள்ளதாக, இலாப நோக்கற்ற அமைப்பு மற்றும் கனேடிய மோசடி தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதில் 250க்கும் மேற்பட்டோர் பணத்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 2019ஆம் ஆண்டில் சுமார், 150,000 டொலர்களை இழந்துள்ளவர்களுடன் ஒப்பிடும்போது, கனடியர்கள் போலியாக செல்லப்பிராணிகளை வளர்ப்பாளர்களுக்கு இரையாகி இந்த ஆண்டு இதுவரை சுமார் 300,000 டொலர்களை இழந்துள்ளனர் என்றும் தடுப்பு மையம் கூறுகிறது. வெஸ்டர்ன் யூனியன் போன்றRead More →

Reading Time: < 1 minuteஎதிர்வரும் இலையுதிர் காலம் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களில் புதிய அபாயங்களைக் கொண்டு வரும் என்று கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரேசா டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடைகாலத்தின் இறுதி நீண்ட வார இறுதியில், தங்கள் சொந்த ஆபத்து காரணிகளையும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எந்தவொரு நேரில் கூடிய கூட்டங்களுக்கான திட்டங்களின் விபரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஒட்டாவாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்Read More →

Reading Time: < 1 minuteபிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி கிரேகோயர் ட்ரூடோ தங்கள் குழந்தைகளை மீண்டும் பாடசாலைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். பிரதமரின் அலுவலகம் இப்போதைக்கு, ட்ரூடோவின் மூன்று குழந்தைகள் வகுப்பில் கற்றல் திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியது. ட்ரூடோவின் குழந்தைகள் அனைவரும் ஒன்றாரியோவில் உள்ள பொதுப் பாடசாலையில் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது. இதேபோல, பழமைவாதக் கட்சித் தலைவர் எரின் ஓ’டூலும் அவரது மனைவியும் தங்கள் இரு குழந்தைகளையும் மீண்டும் பாடசாலைக்கு அனுப்பRead More →

Reading Time: < 1 minuteகொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாகாணமாக கியூபெக் விளங்குகின்றது. அங்கு இதுவரை மொத்தமாக 63,117பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,767பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இதுவரை 55,724பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கியூபெக்கில் 184பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மேலும், 109பேர் குணமடைந்துள்ளனர். கனடாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஒரு இலட்சத்துRead More →

Reading Time: < 1 minuteவிமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்த இருவருக்கு தலா 1,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கனடா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. விமானத்தில் முகக்கவசம் அணிய மறுத்ததற்காக முதல் முறையாக அபராதம் விதிக்கபடுவது இதுவே முதல்முறையாகும். முதல் சம்பவம் ஜூன் மாதம் கல்கரியிலிருந்து ஒன்றாரியோவின் வாட்டர்லூவுக்கு ஒரு வெஸ்ட்ஜெட் விமானத்திலும், அடுத்தது ஜூலை மாதம் வான்கூவரில் இருந்து கல்கரிக்கு வெஸ்ட்ஜெட் பயணத்திலும் நிகழ்ந்தது. இரண்டு சம்பவங்களிலும், விமானங்களின் போது தனிமனிதர்கள் முகக் கவசத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடா ஒன்ராரியோவில் புளுமவூன்டன் (Blue Mountains) எனும் இடத்தில் 03-09-2020 இரவு 11 மணியளவில் (Grey Road 19 Near Craigmore Crescent) Audi Sedan கார் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் Oshawa and Whitchurch-Stouffville பகுதிகளை சேர்ந்த இரண்டு தமிழர்கள் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டு, ஒருவர் டொரோண்டோ மருத்துவமனைக்கு மருத்துவ உலங்குவானூர்தியில் எடுத்துச்செல்லப்பட்டதாக ஒன்ராரியோ மாகாண பொலிஸார் (OPP) அறிவித்துள்ளனர். விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் தனபாலசிங்கம் கஜன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்து 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 493பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் அங்கு 570பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 6பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 141பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்தாயிரத்து 908பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைRead More →