Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுநோய்களின் போது மாணவர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்கும், விவாதிப்பதற்கும், நிறைவேற்றுவதற்கும் பொதுச்சபை மீண்டும் கூடவுள்ளது. கொவிட்-19 தொடர்பான சிறப்பு அனைத்து கட்சி குழுவின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு கட்சியின் நிலைப்பாட்டிற்கும் விகிதாசாரமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் புதன்கிழமை வெஸ்ட் பிளாக்கில் நேரில் சந்திக்க உள்ளனர். மத்திய அரசின் வாக்குறுதியளிக்கப்பட்ட இந்த சட்டத்தை பின்னர் நிறைவேற்ற அவர்கள் சபையின் முறையான கூட்டத்திற்குRead More →

Reading Time: < 1 minuteஎட்மண்டனுக்கு மேற்கே உள்ள புத்தம் புதிய வீடு தீக்கிரையான சம்பவம் குறித்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று (திங்கட்கிழமை) இரவு 8.30 மணியளவில் ஸ்டோனி சமவெளிக்கு வடக்கே ரேஞ்ச் வீதி 580 மற்றும் டவுன்ஷிப் வீதி 540இற்க்கு அருகில் கிராமப்புற துணைப்பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், இந்த தீவிபத்தின் போது எவ்வித உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய வீட்டின் கட்டுமானம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 2,707ஆக அதிகரித்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 147பேர் உயிரிழந்ததோடு, 1,605பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 48,500பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27,525பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 18,268பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள நியூ பிரன்சுவிக்கில், மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வாரம் சில கட்டுப்பாடுகள் தளத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதற்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்படவில்லை. வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்த முதல் கட்டத்தின் ஒரு பகுதியாக பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. குழிப்பந்தாட்ட மைதானங்கள் மீண்டும் வணிகத்தில் ஈடுபட உள்ளன. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் வளாக வசதிகளை திறக்கலாம்.Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் தொற்றால் முடங்கி போயுள்ள, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய இரண்டு மாகாணங்கள் இந்த வாரம் தங்களது வழக்கமான பணிகளை தொடங்கும் வாய்ப்பு உள்ளது. கனடாவில் மாகாணங்கள் தங்கள் மூடப்பட்டுள்ள பொருளாதாரங்களை மீண்டும் திறக்கத் தொடங்குவதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதன் முதற்கட்டமாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் முடங்கி போயுள்ள நியூ பிரன்சுவிக்கில், மீண்டும் வணிக நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தநிலையில் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகியRead More →

Reading Time: < 1 minuteமருத்துவர் மேற்பார்வை இல்லாமல் குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதற்கு எதிராக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொவிட்-19 தொற்றினை தடுக்க அல்லது சிகிச்சையளிக்க சிலர் நேரடியாக குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வாங்குவதையும் பயன்படுத்துவதையும் சுகாதார கனடா கவலை கொண்டுள்ளது’ என்று நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றினை தடுப்பது, சிகிச்சை அல்லது குணப்படுத்த எந்த மருந்துகளும் அங்கீகரிக்கப்படவில்லை என்று சுகாதாரத் துறைRead More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று அச்சுறுத்தல் காரணமாக, வீடற்றவர்களை பாதுகாக்கும் ஒரு நடவடிக்கையின் அங்கமாக வீடற்ற 1,000 பேரை தங்கும்விடுதி அறைகளுக்கு மாற்றப் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து அவர்களை பாதுகாக்க முடியும் என மாகாணம் நம்புகின்றது. சமூக மேம்பாடு மற்றும் வறுமைக் குறைப்பு அமைச்சகம் மற்றும் மனநலம் மற்றும் அடிமையாதல் அமைச்சகத்தின் கூட்டு அறிக்கையில், இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஷெப்பர்ட்ஸ் ஒஃப் குட் ஹோப் தங்குமிடம் அருகே தாக்குதலை மேற்கொண்டவரை ஒட்டாவா பொலிஸார் கைது செய்துள்ளனர். 48 வயதான டொனோவன் பிராம்வெல் என்பவவேர இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் மீது, ஆயுதம், ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் தகுதிகாண் மீறல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். எனினும், முர்ரே வீதி மற்றும் கிங் எட்வர்ட் அவென்யூ பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்டவரின் காயங்கள் உயிருக்கு ஆபத்தானதாகக்Read More →

Reading Time: < 1 minuteகொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,560ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) ஒருநாளில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 163பேர் உயிரிழந்துள்ளனர். 1466பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை 46,648ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், 26,845பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. 17,243பேர் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ போக்குவரத்து ஆணையம், எதிர்வரும் வாரங்களில் தனது 1,200 ஊழியர்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளது. பயணத்தின் சரிவு மற்றும் மாத வருமானத்தில் 90 மில்லியன் டொலர் இழப்பு காரணமாக, ரொறன்ரோ போக்குவரத்து ஆணையம், இந்த முடிவினை எடுத்துள்ளது. அமல்கமடேட் டிரான்சிட் யூனியன் லோக்கல் 113 உடனான பேச்சுவார்த்தைக்கு உட்பட்டு, சேவைத் தேவைக்கு ஏற்ப சேவைத் திறனை ஈடுகட்ட 1,000 போக்குவரத்து இயக்குபவர்களைத் தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யவுள்ளதாகவும் போக்குவரத்துRead More →