Reading Time: < 1 minuteஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 63 கனேடியர்களும் அடங்குவதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் வடிம் பிரிஸ்ரைகோ (Vadym Prystaiko) தெரிவித்துள்ளார். இவ்விபத்தில் ஈரான், உக்ரைன், சுவீடன், ஆப்கானிஸ்தான், பிரித்தானியா மற்றும் ஜேர்மன் பிரஜைகளும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்குச் சொந்தமான போயிங்-737 என்ற விமானம் ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது. மேலும் இயந்திரக் கோளாறு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம்Read More →

Reading Time: < 1 minuteடொரோண்டோவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞனவே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. காணாமல் போன இளைஞன் பழுப்பு நிற ஜெக்கெட் மற்றும் கணுக்கால் உயரத்தில் குளிர்கால பூட்ஸ் அணிந்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவர் தொடர்பான தகவல்கள் தெரித்தால் ரொறன்றோ பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஈராக்கிலுள்ள அமெரிக்கப் படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் கனேடியத் துருப்புக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான எர்பில் விமானத் தளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் கனேடியத் துருப்புக்களும் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் குறித்த விமானத் தளத்தில் கனேடியத் துருப்புக்களோ அல்லது பணியாளர்களோ பாதிப்புக்குள்ளாகவில்லை என கனடாவின் பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் ஜொனதன் வான்ஸ் தனதுRead More →

Reading Time: < 1 minuteவின்னிபெக் பகுதியில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, ஆறு பேரை காப்பாற்றிய ஒருவருக்கு தீயணைப்பு படையினர் மற்றும் மக்கள் பாரட்டு தெரிவித்துள்ளனர். ஸ்பென்ஸ் பகுதிக்கு அருகிலுள்ள ஃபர்பி வீதியின் 400 தொகுதிகளில் மூன்று மாடி கட்டடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6:18 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. கெல்லி பிரவுண் என்பவரே பற்றி எரிந்துக் கொண்டிருந்த குறித்த கட்டத்திற்குள் சிக்கியிருந்த ஆறு பேரையும், தக்க சமயத்தில் வெளியேற்றியுள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteஇயற்கை பேரழிவுகளை கையாள்வதற்கான ஒட்டாவாவின் சட்டமூலங்கள், கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு பில்லியன் டொலர்களை நெருங்கியுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பேரழிவு உதவிக்காக ஓராண்டு சராசரியாக, 430 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு கனடாவின் தரவு தெரிவிக்கின்றது. இதில், 2016-17ஆம் ஆண்டில் 485.8 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2017-18ஆம் ஆண்டில் 494.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், 2018-19ஆம் ஆண்டில் 309.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும் அடங்கும். அதற்குRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா- நெல்சன் பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டின் போது, காணமல்போன இரு சிறுவர்களை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். வயிட்வாட்டர் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள பகுதியில் குறித்த இரண்டு சிறுவர்களும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது, நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) காணாமல்போனதாக பொலிஸாருக்கு அழைப்பு கிடைத்துள்ளது. இரவு வேளையில் அழைப்பு கிடைத்த போது, வானிலை மோசமடைந்ததால் சிறுவர்களை தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அவர்களை தேடும் பணிகள்Read More →

Reading Time: < 1 minuteலண்டனின் பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய ஒருவர், உயிராபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண் ஒருவரே இவ்வாறு உயிராபத்தான காயங்களுடன் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிடில்செக்ஸ்-லண்டன் அவசர மருத்துவ சேவைகள் தெரிவித்துள்ளது. ஒயிட் ஓக்ஸ் சுற்றுப்புற பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் தீவிபத்து சம்பவவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்புத் துறையும், அவசரகால குழுவினரும் கடுமையாக போராடி தீயினை கட்டுக்குள்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ- பிராம்ப்டனில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்னை, பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். உயிரிழந்த பெண், 16வயதான டயானா மனன் என பீல் பிராந்திய பொலிஸார் அடையாளம் காணப்பட்டனர். தி கோர் வீதிக்கு அருகிலுள்ள குயின் வீதி மற்றும் செர்ரிகிரெஸ்ட் ட்ரைவ் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 12:20 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர குழுவினர், பதின்ம வயது பெண்னொருவரை உயிரபத்தான காயங்களுடன்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயிரக்கணக்கான ஹைட்ரோ வாடிக்கையாளர்களுக்கு, மின்தடை ஏற்பட்டுள்ளதாக ஹைட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அங்கு தொடர்ந்து கடுமையான பனிப்புயல் வீசி வருவதால், மின் வழங்கும் பணிகள் சற்று தாமதடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று வீசிய கடும் பனி புயலால், 160,000 வாடிக்கையாளர்களுக்கு மின்தடை ஏற்பட்டது. இதனை சீரமைக்கும் பணிகள் முழுமையடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஆயிரக்கணக்கானோருக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இழந்த வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் லோயர் மெயின்லேண்ட் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஅவுஸ்ரேலியாவில் தீவிரமடைந்து வரும் ஆபத்தான காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட, கனடாவின் தீயணைப்பு குழுவொன்று அங்கு விரைந்துள்ளது. பேரழிவை ஏற்படுத்தியுள்ள காட்டுத் தீயை அணைப்பதற்கு 3,000 படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது. இதில் கனடாவை சேர்ந்த 21 கனேடியர்கள் கொண்ட குழுவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவுஸ்ரேலியாவிற்கு மூன்று தீயணைப்பு படை குழுக்கள் அனுப்பபட்டுள்ள நிலையில், நான்காவது குழு இன்று (சனிக்கிழமை) நியூ சவுத் வேல்ஸிற்கு சென்றுள்ளது. முதலாவது குழுRead More →