Reading Time: < 1 minuteஓன்ராரியோ – மாகாணம் ஸ்கார்பாரோ-ரூஜ்பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி பூர்வகுடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவால் நியமிக்கப்பட்டுள்ளார். முந்தைய 42 ஆவது பாராளுமன்றத்தில் 2015 முதல் 2018 வரை பூர்வகுடியினர் மற்றும் வடக்கு விவகாரக் குழுவின் உறுப்பினராக ஹரி ஆனந்தசங்கரி பணியாற்றினார். கனேடிய பூர்வகுடியினர் நலன் சார்ந்த 262-ஆவது இலக்க சட்டமூலத்தை பாராளுமன்றில் நிறைவேற்ற அவர் முன்னின்றார். பூர்வகுடி மக்களின் உரிமைகள் தொடர்பாகRead More →

Reading Time: < 1 minuteநோர்த் யோக் பகுதியில் துப்பாக்கி சூடு இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திலிருந்து இவ் இருவரும் தப்பியோடிவிட்டதாக தெரிவித்துள்ள பொலிஸார், இவர்கள் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். லெஸ்லி வீதி மற்றும் பிஞ்ச் அவென்யூ பகுதியில் நேற்று (புதன் கிழமை) இரவு 8:30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், 20 வயதுRead More →

Reading Time: < 1 minuteஎட்டோபிகோக்கில் உள்ள குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 27 மற்றும் ரெக்ஸ்டேல் பவுல்வர்ட்டுக்கு அருகிலுள்ள டிரிபிள் கிரவுன் அவென்யூ மற்றும் மேர் கிரசண்ட் பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டிலேயே நேற்று (புதன்கிழமை) இரவு 9 மணிக்குப் பிறகு, இந்த தீவிபத்து ஏற்பட்டது. இதன்போது, சம்பவமறிந்து வந்த தீயணைப்பு படையினர், கடுமையாக போராடி தீயினை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும், இச்சம்பவத்தின் போது துரதிஷ்டவசமாகRead More →

Reading Time: < 1 minuteவன்கூவர் தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கப்ரியலா தீவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த விமானி அடையாளங்காணப்பட்டுள்ளார். உயிரிழந்த விமானி, பயிற்றுவிப்பாளர் அலெக்ஸ் பால்சென் என அடையாளங் காணப்பட்டுள்ளார். இதனை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். டிரான்ஸ்போர்ட் கனடாவுடன் ஒரு பரிசோதனையாளராக பணியாற்றிய பஹ்ல்சன், தனது பைபர் ஏயிரோஸ்டார் என்ற இரட்டை எஞ்சின் புரொப்பல்லர் விமானத்தில் பயணித்த வேளையிலேயே விபத்துக்குள்ளாகியுள்ளார். இரட்டை என்ஜின்கள் கொண்ட விமான விபத்தில், எத்தனை பேர் பயணித்தனர்Read More →

Reading Time: < 1 minuteசர்ச்சைக்குரிய நஃப்ரா (NAFTA) ஒப்பந்தம் தொடர்பாக நீண்டகாலமாக காணப்பட்டுவந்த முரண்பாட்டுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. மெக்சிகோ மற்றும் அமெரிக்காவுடனான வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் புதிய ஒப்பந்தத்தில் கனடா கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நீடித்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மூன்று நாடுகளுக்கிடையில் கடைசி நிமிட உரையாடல்கள் நடந்ததைத் தொடர்ந்து, துணைப் பிரதமர் கிறிஸ்ரியா ஃப்ரீலான்ட் நேற்று செவ்வாய்க்கிழமை மெக்சிகோவிற்கு சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதேவேளை, இந்த ஒப்பந்தம் நீண்ட காலத்தைக்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவர் தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள கப்ரியலா (Gabriola) தீவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த தீவின் வடமேற்கு மூலையில் விமானம் விபத்துக்குள்ளானதாக கப்ரியலா ஆர்.சி.எம்.பி (Royal Canadian Mounted Police) அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6:10 அளவில் தகவல் கிடைத்ததாக அம்பியூலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. இதையடுத்து விபத்து நடந்த இடத்திற்கு ஐந்து அம்பியூலன்ஸ்கள் படகு வழியாக அனுப்பிவைக்கப்பட்டன.Read More →

Reading Time: < 1 minuteமுழுவதும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane) கனடாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்கூவரைச் சேர்ந்த ஹார்பர் எயார் சீபிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மக்னி எக்ஸும் (magniX ) கூட்டாக இந்த விமானத்தை உருவாக்கியுள்ளன. 6 பேர் பயணிக்கக் கூடிய இந்த விமானம், ரிச்மாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து குறித்த விமானம், கடல் பகுதியில் தனது முதல் ஒத்திகைப்Read More →

Reading Time: < 1 minuteகனடா ஒன்ராறியோவைச் சேர்ந்த 27 வயதான ஜஸ்டின் நோயல் என்ற பெண் குணப்படுத்த முடியாத நோயுடன் போராடி வருவதன் காரணமாக கருணைக் கொலையை மேற்கொள்ள உதவுமாறு கனடா மத்திய அரசைக் கோரியுள்ளார். தன்னைப் போல குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கும் சட்டரீதியான கருணைக் கொலைச் சட்டம் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருணைக் கொலை சட்டத்தில் இருக்கும் கடினமான சரத்துக்களில் திருத்தம் கொண்டு வர கனடா மத்திய அரசுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் உயிரிழந்த இந்திய இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து. அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteDurham பிராந்தியத்தில் நீடிக்கப்பட்ட 407 நெடுஞ்சாலையின் பகுதி, 418 நெடுஞ்சாலை ஆகியன, பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறக்கப்பட்டுள்ளன. 14 கிலோமீற்றர்கள் நீடிக்கப்பட்ட 407 நெடுஞ்சாலை, 35 மற்றும் 115 நெடுஞ்சாலைகளை இணைப்பதுடன், Peterboroughவுக்கான பயணத்தை இலகுவாக்குகின்றது. அதேவேளை, 10 கிலோமீற்றர்கள் நீளமான 418 நெடுஞ்சாலை, 401 நெடுஞ்சாலையையும், 407 நெடுஞ்சாலையையும் இணைக்கிறது. ஒண்டாரியோ மாகாணத்தை, வர்த்தகத்துக்காகவும் வேலை வாய்ப்புக்களுக்காகவும் திறக்கப்பட்டிருக்க, இந்த முதலீடுகள் உதவியாக இருக்குமென, மாகாண உட்கட்டமைப்பு அமைச்சர்Read More →