Reading Time: < 1 minuteரஷ்யா மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் குறித்து கனடா தெளிவான பார்வையை (clear eyed) கொண்டிருக்க வேண்டும் என கனடாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரிச்சார்ட் ஃபடென் தெரிவித்துள்ளார். குறித்த இரு நாடுகளும் ஏற்படுத்தும் அபாயங்கள் நிச்சயமாக வேறுபட்டவை எனவும் அவை பொதுவாக அந்நாடுகளின் நலன் சார்ந்தவையாகவும் மேற்கு நாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது முன்னோடியான ஸ்டீபன் ஹார்ப்பர்Read More →

Reading Time: < 1 minuteகனடா – ரொறென்ரோ நகரில் எட்டாவது மாடி யன்னலிலிருந்து வளி சீராக்கி குளிர்சாதனம் ஒன்று குழந்தைகளை கொண்டு தள்ளுவண்டியின் மீது வீழ்ந்ததில் 2 வயதுச் சிறுமியொருவர் உயிரிழந்தார். ரொறென்ரோ நகரில், பிள்ளையைத் தள்ளுவண்டியில் வைத்துத் தாயார் ஒருவர் நடத்து சென்றுகொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளிர்சாதனம் விழுந்ததில் சிறுமியின் தாயாருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறுமி பலத்த காயங்களின் காரணமாக சிகிச்சைRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் கடந்த மாதம் உயரமான குடியிருப்பு கட்டிடத்தில் இருந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட இருவரும் உயிரிழந்த நிலையில் அடையாளங் காணப்பட்டுள்ளனர். கொலை மற்றும் தற்கொலை மூலம் உயிரிழந்ததாக கூறப்படும், இருவரில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் அடங்குகின்றனர். இதில், 22 வயதான ரொறான்ரோவைச் சேர்ந்த பெத்தேல்ஹெம் கெலெட்டா, கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவரை கொலை செய்தவராகச் சந்தேகிக்கப்படும் ரொறான்ரோவைச் சேர்ந்த 30 வயதானRead More →

Reading Time: < 1 minuteமனித உடலின் நலனை மேலும் அதிகரிப்பதற்கு தோலின் மீது தினமும் சிறிதளவாவது சூரிய ஒளி படவேண்டும் என்பது மருத்துவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர். ஆனால், தோல் மீது சூரிய ஒளிபடுவதற்கும், மனித குடலுக்குள் வசிக்கும் லட்சக்கணக்கான பயன்மிக்க நுண்ணுயிரிகளுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை, முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரிய கதிரிலுள்ள புற ஊதா கதிர்கள், தோலின் மீது படும்போது, விற்றமின் – டி, நம் உடலில் உற்பத்தியாகிறது.Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள சானிச் பாடசாலை ஊழியர்களின் போராட்டம், மூன்றாவது வாரமாகவும் தொடர்கின்றது. கடந்த மாதம் 28ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டுவரும் சானிச் பாடசாலை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்புப் போராட்டத்தினால், 700இற்கும் மேற்பட்ட மாவணர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவணர்களின் நலன் கருதி, சானிச் பாடசாலை ஊழியர்களும், பாடசாலை மாவட்ட நிர்வாகத்தினரும் ஒரு உடன்பாட்டுக்கு வருவதற்கு தீர்மானித்தனர். இதனால் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அந்தப்Read More →

Reading Time: < 1 minuteப்ளஃபர்ஸ் (Bluffs) பூங்காவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் குறித்து, ரொறன்ரோ பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சடலம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனினும், குறித்த சடலம் குறித்த எவ்வித தகவலையும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பிரிம்லி வீதியின் அடிவாரத்தில் உள்ள பூங்காவின், வாகன நிறுத்துமிடத்தில் எரிந்து கொண்டிருந்த வாகனத்திலிருந்து நேற்றுRead More →

Reading Time: < 1 minuteவடக்கு டகோட்டாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மசகு எண்ணெய் கசிவு, சீரமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு டகோட்டாவில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி, 1.4 மில்லியன் லிட்டர் (9,120 பீப்பாய்கள்) எண்ணெய் கொட்டப்பட்டதை அடுத்து கீஸ்டோன் குழாய் மூடப்பட்டது. இதனையடுத்து இந்த கசிவினை சீரமைக்கும் பணியில், டி.சி எனர்ஜி முன்னெடுத்து வந்தது. இந்த நிலையில் இப்பணி சீராமைக்கப்பட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழமைக்கு திரும்பியது. தற்போது மசகு எண்ணெய், குறைந்தRead More →

Reading Time: < 1 minuteசர்ரே பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிராபத்தான காயங்களுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 104 அவென்யூவின் 13200 தொகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வேளையில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. குவாண்ட்லன் பார்க் மேல்நிலைப்பள்ளிக்கு அருகிலேயே குறித்த நபர், இலக்கு வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திற்கு வந்தபோது, குறித்த நபர் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும் பின்னர் அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்Read More →