Reading Time: < 1 minuteகல்கரியில் வீடு விற்பனை மந்தமான நிலையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், தனி வீடுகளின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2018ஆம் ஆண்டு முதல் செப்ரெம்பர் 2019ஆம் ஆண்டு வரையிலான கனடா புள்ளிவிபரம் வெளியிட்டுள்ள புதிய வீட்டு விலைக் குறியீட்டில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, புதிய வீட்டின் சராசரி விலையில் 2.2 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதனை, குறித்த அறிக்கை தெளிவுப்படுத்தியுள்ளது. எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில்Read More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டா பொலிஸ் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் மில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள போதை மருந்துகள், பணம் மற்றும் துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர். மிகப்பெரிய போதைப்பொருள் வலையமைப்பின் மையத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஒரு கல்கரி நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர் 53 வயதான வாரன் லோவ் என பொலிஸார அடையாளம் வெளியிட்டுள்ளனர். கல்கரி அதிகாரிகள் தலைமையிலான இரண்டு ஆண்டு விசாரணையின் பின்னரே, குறித்த ஆபத்தான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 15 மில்லியன்Read More →

Reading Time: < 1 minuteகாணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட பாடகி சுசித்ரா, நான்கு நாட்களுக்கு பிறகு சென்னை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். பிரபல நடிகர், நடிகைகளின் சர்ச்சைக்குரிய அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு கோலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் பாடகி சுசித்ரா.தன் ஆரம்பகால வாழ்க்கையை ரேடியோ மிர்ச்சி எஃப்எம்மில் தொடங்கியவர் பாடகி சுசித்ரா. தனது வசீகர குரலால் ரசிகர்களின் மனதை கவர்ந்த அவர், தொடர்ந்து லேசா லேசா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பின்னணி பாடகியாக தன் பயணத்தை தொடங்கினார்.Read More →

Reading Time: < 1 minuteகனடிய மக்களின் நிதிசார்ந்த தகவல்கள், கனடிய அரசினால் அமெரிக்க அரசுடன் பகிரப்படும் அளவு வெகுவாக உயர்வடைந்துள்ளமை தொடர்பில், கனடிய இறையாண்மையை பாதுகாப்பதற்கான கூட்டமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு இருநாட்டு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது முதல், இவ்வெண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக அது சுட்டிக்காட்டியுள்ளது. வரி அறவிடும் நோக்கங்களுக்காக, கனடிய வருமானவரி திணைக்களத்தால், 2014ஆம் ஆண்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனடியர்களின் நிதிசார் தரவுகள், அமெரிக்க உள்ளக வருமானவரி திணைக்களத்துடன் பகிரப்பட்டிருந்தன.Read More →

Reading Time: < 1 minuteலண்டன் கிழக்கு பகுதியில் வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், 2 துப்பாக்கிகள், ஒரு பாலிஸ்டிக் உடை மற்றும் வெடிமருந்துகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அடிலெய்ட் வீதி மற்றும் ஹாமில்டன் வீதிக்கு அருகிலுள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே குறித்த தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்வத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் டிசம்பர் பிற்பகுதியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான தகவல்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ- தேம்ஸ்ஃபோர்ட் வடகிழக்கில் இடம்பெற்ற மூன்று வாகனங்கள் தொடர்புபட்ட வாகன விபத்தில் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். ஆக்ஸ்போர்ட் கவுண்டியைச் சேர்ந்த பெண்னொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸ் மற்றும் அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஒரு மினி வான், பிக்-அப் டிரக் மற்றும் ஒரு டிராக்டர்-டிரெய்லர் ஆகியவை அடங்கும். மினி வானின் சாரதியான 53 வயதான பெண்னொருவரே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, உயிரிழந்தார். பிக்கப் டிரக்கின்Read More →

Reading Time: < 1 minuteஎட்மண்டனில் தேசிய பூங்கா ரயில்களால் அதிகளவான கிரிஸ்லி கரடிகள் மோதப்பட்டு உயிரிழப்பதாக ஆல்பர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணர் மற்றும் உயிரியல் பேராசிரியரான கொலின் கசாடி செயின்ட் கிளெய்ர் தலைமையிலான குழு பல ஆண்டுகளாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் பின்னர், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடா பூங்காக்கள் மற்றும் கனடிய பசிபிக் ரயில்வே அதிகாரிகள் 2000ஆம் ஆண்டில் பான்ஃப் தேசிய பூங்காவில் ரயில்களால் கிரிஸ்லி கரடிகள் கொல்லப்படுவதை அவதானித்துள்ளனர்.Read More →

Reading Time: < 1 minuteசவுதி அரேபியாவில் இருந்து பயணித்த விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணித்த 2 வயது குழந்தை உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் விமானம் தரையிறக்கப்பட்டது. எனினும் குழந்தை உயிரிழந்துள்ளது. சவுதியின் ஜெட்டாவில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 6.30 மணிக்கு பயணிகள் விமானம் வொஷிங்ரனை நோக்கிப் பயணித்தது. இந்நிலையில் விமானத்தில் இருந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட காரணத்தால் விமானமானது கனடாவின் நியூபௌண்ட்லான்ட் (Newfoundland) மாகாணத்தில்Read More →