Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்கார்ப்ரோவின் மில்லிகன் (Milliken) பிரதேசத்தில் பெண்ணொருவரை வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபரை பொலிஸார் வலைவிரித்து தேடி வருகின்றனர். இந்த மோதலால் குறித்த பெண் சுயநினைவு இழந்த நிலையில் தீவிர காயங்களுடன் ட்ரோமா (trauma) மருத்துவ நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கனடாவில், மிட்லான் மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ வீதியில் வைத்து 40 அல்லது 50 வயது மதிக்கத்தக்க பெண் மீது நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலை 6:30 அளவில்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின், மார்க்கம் பகுதியில் உள்ள ரிம் ஹோர்ரன்ஸ் (Tim Hortons) பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் மீது மற்றைய நபர்களால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயங்களுக்கு உள்ளானவர்களின் உடல் நிலை தற்போது தேறிவருவதாக ரொறென்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை Tim Hortons-னில் இளைஞர்களிடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது இரண்டு பேர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற யோர்க் பிராந்தியRead More →

Reading Time: < 1 minuteஇந்த வாரம் திரைக்கு வந்த இரண்டு படங்களான நடிகர் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ மற்றும் விஷாலின் ‘ஆக்‌ஷன்’ ஆகிய இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பினைப் பெறவில்லை. 2019ஆண்டு தொடங்கி இன்றுவரை தொடர்ந்து ஹிட் படங்கள் தமிழ்ச் சினிமாவில் வந்துக்கொண்டே இருந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று வெளியான இரு ஹீரோக்களின் படமும் அவ்வளவு சிறப்பாக பாக்ஸ் ஆப்பிஸில் போகவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனிடையே, விஜய் சேதுபதியின் ‘ சங்கத்தமிழன்’Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பெரும்பாலான பகுதிகளில், இம்முறை நீண்ட குளிர்காலம் நிலவுமென, காலநிலை வல்லுநர்கள் எதிர்வு கூறியுள்ளனர். பல பகுதிகள் ஏற்கனவே இம்மாதம் சாதனை அளவிலான பனிப்பொழிவுகளை சந்தித்துள்ள நிலையில், இந்நிலை குளிர்காலம் முழுக்க நீடிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். எனவே, தெற்கு ஒண்டாரியோ தொடக்கம் தெற்கு கியூபெக் வரையில் வாழும் மக்கள், வழமையை விட அதிக குளிர் மற்றும் பனிப்பொழிவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது சிறந்ததென, Weather Networkஇன் தலைமைRead More →

Reading Time: < 1 minuteமனிடோபாவில் 19 வயது டார்லியஸ் மெக்கே சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, இருவரை வின்னிபெக் பொலிஸார் கைது செய்துள்ளனர். சால்டர் மற்றும் ஐகின்ஸ் வீதிகளுக்கு இடையில் பாய்ட் அவென்யூவில் உள்ள வீடொன்றில் இருந்து 37 வயதான டெரெக் டொனால்ட் பிராங்ளின் என்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை 26 வயதான கிறிஸ்டோபர் டகோட்டா முர்டாக் என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாவும், அவர்Read More →

Reading Time: < 1 minuteகல்கரியில் அதிகமான பனிப்பொழிவை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹெயார் ட்ரை, ப்ரூக்ஸ், வுல்கன், மெடிசின் ஹெட், ஹை ரிவர் ஆகிய இடங்களுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு ஆல்பர்ட்டாவில் இருந்து குறைந்த அழுத்த நகர்வொன்று, மாகாணத்திற்குள் நகர்வதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) 10 முதல் 15 சென்டிமீட்டர்Read More →

Reading Time: < 1 minuteசமீபத்திய மாகாண நிதி குறைப்பினால், 250 வேலை குறைப்பினை எதிர்கொள்ளும் அபாயத்தினை கல்கரி பல்கலைக்கழகம் எதிர்கொண்டுள்ளது. காலியிடங்களை குறைத்தல் மூலம் 100 வேலை குறைப்பினையும், ஓய்வு மற்றும் ராஜினாமாக்கள் மூலம் 150 வேலை குறைப்பினையும் மேற்கொள்ளவுள்ளது. இரண்டு சுற்றுக்களான இந்த பணி நீக்கங்கள் இருக்குமென யு சி சி புரோவோஸ்ட் மற்றும் துணைத் தலைவர் ட்ரு மார்ஷல் தெரிவித்துள்ளார். முதலாவது வேலை குறைப்பு இந்த மாத இறுதியிலும், இரண்டாவது வேலைRead More →

Reading Time: 2 minutesஇலங்கையின் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்து மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக கனடா ஆளும் லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ, அவரது சகோதரர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றைச் செய்தவர்களாவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ஆயுதப்படைகள் செய்த போர்க்குற்றங்களுக்கு உத்தரவிட்டவர்கள் இவர்களே எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நல்லிணக்கத்திற்கானRead More →