Reading Time: < 1 minuteஒன்ராறியோவில் எதிர்வரும் புதிய ஆண்டில், கஞ்சா சில்லறை விற்பனை முறையை விரிவுபடுத்தப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. போட்டியை அதிகரிக்கவும், கறுப்புச் சந்தையை எதிர்த்துப் போராடுவதற்கும் அதிகமான சில்லறை விற்பனை கடைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் உறுதி செய்துள்ளதோடு, இதற்கான நடவடிக்கைகளையும் அவர் முன்னெடுத்து வருகின்றார். இதுகுறித்து ஒன்றாரியோ முதல்வர் டக் ஃபோர்ட் கூறுகையில், ‘கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்த பின்னர் கன்சர்வேடிவ் கட்சி, அளித்த வாக்குறுதியின்Read More →

Reading Time: < 1 minuteகல்கரியில் ஃபெடரேட்டட் கூட்டுறவு லிமிடெட்டில் (எஃப்.சி.எல்) 200 இற்கும் மேற்பட்டோர், வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் கல்கரி கூட்டுறவு, உணவு விநியோகஸ்தர்களை மாற்ற தீர்மானித்துள்ளதால் இந்த மாற்றம் ஏற்படவுள்ளது. ஃபெடரேட்டட் கூட்டுறவு லிமிடெட் (எஃப்.சி.எல்), எதிர்வரும் ஆண்டு மூடப்போவதாகக் அறிவித்துள்ளது. இதன் பின்னணியில் இந்நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் வேலையை இழக்கவுள்ளனர். கால்கரி கூட்டுறவு தனது உணவை போட்டியாளரான சேவ்-ஆன்-ஃபுட்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற முயல்கின்றது. இதுகுறித்து எஃப்.சி.எல்Read More →

Reading Time: < 1 minuteமத்திய ஓஷாவாவில் (Oshawa) வெள்ளிக்கிழமை அதிகாலை சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண் வாகனம் ஒன்றில் மோதி இறந்து விட்டார். 30 வயதுடைய அந்த பெண் பலத்த காயங்களுடன் இருந்ததாகவும் அருகில் உள்ள மருத்துவனைக்கு எடுத்துச் செல்கையில் இறந்து விட்டதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் வரை பொதுமக்கள் விபத்து நடந்த பகுதியில் போக்குவரத்துப் பாதையை தடுத்தனர். விபத்தினை ஏற்படுத்திய டிரைவர் நெடுஞ்சாலை 401ல் தப்பி ஓடிவிட்டார் என்றுRead More →

Reading Time: < 1 minuteவன்கூவர்- வெஸ்ற் என்ட் அடுக்குமாடிக் குடியிருப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு இருவரைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முதியவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த குற்றம் நிரூபணமானது. இதன்படி அயலவர்களைக் கொன்ற குற்றத்திற்காக, 75 வயதான லியோனார்ட் லான்ட்ரிக் என்பவர் மீது கொலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலைRead More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா – வன்கூவர் தீவின் நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் பெண் என்றும், ஆபத்தான நிலையில் இருவரில் ஒருவர் ஆண் என்றும் மற்றையவர் பெண் என்றும் பொலிஸார், தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த விபத்து, டங்கனுக்கும் கோவிச்சன் ஏரிக்கும் இடையே நெடுஞ்சாலை 18 இல் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) இரவு 8Read More →

Reading Time: < 1 minuteசாஸ்கடூனில் அவென்யூ எச் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக, பொலிஸ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளனர். எஸ்.யூ.வி. ரக வாகனத்தில் கண்டெடுக்கப்பட்ட 32 வயது பெண்ணின் மரணம் தொடர்பாக, ஆரம்பத்தில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தாலும், தற்போது குறித்த பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியது அல்ல என்று கருதப்படுகிறது. நவம்பர் 12ஆம் திகதி மாலை 4:20 மணியளவில், ஜன்னல்களில் கறுப்பு நிற ஸ்டீக்கர் ஓட்டிய பழுப்பு நிற எஸ்யூவியில் இருந்து லவோனா டோபர் (LavonnaRead More →

Reading Time: < 1 minuteலாயிட்மின்ஸ்டருக்கு வடக்கே பல வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து குறித்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். டவுன்ஷிப் வீதி 510இற்க்கு அருகில் நெடுஞ்சாலை 17இல் இந்த விபத்து நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது. விபத்தில் எத்தனை வாகனங்கள் தொடர்பு பட்டுள்ளன, எத்தனை பேருக்கு காயம் என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து பொலிஸார், தீவிர விசாரணை நடத்து வருகின்றனர். அத்தோடு பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடா: தமிழர் பாரம்பரியத்தின் பின்னணி கொண்ட முதலாவது அமைச்சர் கனடாவில் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (புதன்) பதவியேற்ற பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அமைச்சரவையில் ஓக்வில் (Oakville) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனிதா ஆனந்த் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் முதல் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள இவர், டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்ட பேராசிரியராக கடமையாற்றியவராவார். வைத்தியர் சுந்தரம் விவேகானந்த் ஐயரின் புதல்வியான இவர்Read More →