Reading Time: < 1 minuteநேற்று இரவு நெடுஞ்சாலை 401இல் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில் இருந்து இஸ்லிங்டன் அவனியூவுக்கு வெளியேறும் பகுதியில், நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த அந்த ஆண் செலுத்திச் சென்ற வானம், சரக்கு ஊர்தியின் பின்புறத்தில் மோதுண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து சுமார் 30 வயதுRead More →

Reading Time: < 1 minute13 வயதுச் சிறுவன் ஒருவர் செலுத்திச் சென்ற SUV ரக வாகனம் ஒன்று பிறிதொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதுடன், வாகனத்தில் இருந்த பிறிதொரு 13 வயதுச் சிறுவன் உயிராபத்தான காயங்களுக்கு உள்ளான சம்பவம் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று அதிகாலை 4:40 அளவில், Thornhill பகுதி, Dufferin Street மற்றும் Centre Street பகுதியில் சென்ற வாகனம் ஒன்றில் சந்தேகம் கொண்ட யோர்க் பிராந்திய காவல்துறையினர், அந்த வாகனத்தைRead More →

Reading Time: < 1 minuteஉலகில் அனைத்து பாலினத்தவர்களும் சமனானவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் எயார் கனடா விமான நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனடா அரசாங்கம் சில மாதங்களுக்கு முன்னர் மூன்றாம் பாலினத்தவர்களின் கடவுச் சீட்டில் உள்ள பாலின அடையாளம் என்ற வரியில் ஆண் அல்லது பெண் என்பதற்கு பதிலாக non-binary ‘X (மூன்றாம் பாலினத்தவர்கள்) என குறிப்பிடலாம் என்று அறிவித்தது. இந்த நிலையில் குறித்த நடைமுறையை அமுல்படுத்தும் வகையில் எயார் கனடா விமானRead More →

Reading Time: < 1 minuteதுருக்கிப் படைகளினால் வடக்கு சிரியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதலுக்கு பதிலடியாக அந்த நாட்டிற்கான ராணுவ உபகரணங்கள் தொடர்பான ‘புதிய ஏற்றுமதி அனுமதிகளை’ தற்காலிகமாக ரத்துச் செய்வதாக கனடா அறிவித்துள்ளது. சிரியாவுக்குள் துருக்கியின் படை நடவடிக்கைகளுக்கு கனடா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டின் சர்வதேச விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருதலைப்பட்ச போர் நடவடிக்கை ஏற்கனவே பலவீனமாக உள்ள பிராந்தியத்தை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதுடன் மனிதாபிமான நிலைமையையும்Read More →

Reading Time: < 1 minuteஇந்த ஆண்டிற்கான கௌரவம் மிக்க புக்கர் (Booker) விருதினைப் பெற்றுக்கொள்பவர்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த 79 வயதான பெண் எழுத்தாளர் மார்க்கரெட் அற்வூட் (Margaret Atwood) பிரித்தானியாவைச் சேர்ந்த 60 வயதான பெண் எழுத்தாளர் பேர்னர்டீன் எவரிஸ்ரோ (Bernardine Evaristo) ஆகிய இருவரே இந்த விருதினை பெற்றுக்கொள்ளவுள்ளனர். கடந்த 1992ஆம் ஆண்டில்தான் இருவருக்கு புக்கர் விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒருவருக்குத்தான் விருது என விதிமுறை வகுக்கப்பட்டது.Read More →

Reading Time: 2 minutesதியடோர் அன்ரனி (Theodore Antony)அவர்கள் யாழ் மண்ணை பிறப்பிடமாக கொண்டு 1970 களின் நடுப்பகுதியில் உயிரியல் ஆய்வில் பட்ட படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டு 15 வருடகாலம் அங்கு வாழ்ந்த இவர். அமெரிக்காவில் வணிக மேலாண்மை பட்ட படிப்பை முடித்துக் கொண்டு கனடாவிற்க்கு 1989 ல் குடி பெயர்ந்தார். கனடிய மண்ணில் புலமைப்பரிசில் திட்ட முகாமையாளராகி பல்லின மக்களை உள்ளடக்கிய முகவர் நிறுவனத்தை வெற்றிகரமாக நடாத்தியவர் திரு தியடோர் அன்ரனி அவர்கள்.Read More →

Reading Time: < 1 minuteமிசிசாகா பகுதியில் நெடுஞ்சாலை 401இல் பல வாகனங்கள் தொடர்புபட்ட விபத்தில் படுகாமடைந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுமியும், ஆபத்து குறைவான காயங்களுக்கு உள்ளான மேலும் சிலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று நம்புவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலையின் கிழக்கு நோக்கிய வழித்தடத்தில், வின்ஸ்டன் சேர்ச்சில் பவுல்வர்ட் பகுதியில், நேற்று (திங்கட்கிழமை) இரவு இந்தRead More →

Reading Time: < 1 minuteஈட்டோபிக்கோ பகுதியில் வைத்து 28 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்த விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விபரம் வெளியிட்டுள்ள பொலிஸார், சம்பவ இடத்திலிருந்து சுமார் 20 வெற்றுத் தோட்டாக்கள் மீட்கப்பட்டதாகவும், ஒன்றுக்கு மேற்பட்டோர் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டிருக்கக்கூடும் என்று சந்தேகிப்பதாகவும், அவர்கள் அனைவரும் ஒரு வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவேRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க வான்பரப்பில் வைத்து கனேடிய விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் விமானம் ஒன்று எரிந்து வீழந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் கனேடிய அரச விமானப் படையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஜோர்ஜியாவின் ஹம்ப்டன் பகுதியில் நடைபெற்ற வான் சாகச நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த தமது விமானம் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வீழந்து நொருங்கியதாகவும், எனினும் அதன் விமானி விமானம் வீழ்வதற்கு முன்னரே பாதுகாப்பாகRead More →

Reading Time: < 1 minuteஇன்று காலை ஸ்காபரோவில் நடந்து சென்ற ஒரே குடுத்பத்தைச் சேர்ந்த ஒரு கைக்குழந்தை உள்ளிட்ட மூவர் மீது வாகனம் ஒன்று மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் மூவரைத் தேடி வருவதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எல்ஸ்மெயர் வீதி மற்றும் ஃபார்மசி அவனியூ பகுதியில் இன்று முற்பல் 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விபரித்துள்ள காவல்துறையினர், எல்ஸ்மெயர் வீதியில் கிழக்கு நோக்கிப்Read More →