Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்ராறியோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து அந்தப் பகுதியிலுள்ள ஒயில் ஹெரிட்டேஜ் வீதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தின் போது காரின் சாரதி படுகாயம் அடைந்தார். அத்துடன் காரில் பயணம் செய்த மூன்று இளைஞர்களும் விபத்து நடைபெற்ற பகுதிலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக நடத்தபட்ட விசாரணையில் இறந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பியர்ஃபோண்ட்ஸ்-டொலர்டில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் மரியம் இஷாக், யூத-எதிர்ப்பு சுவரொட்டிகளால் குழப்பமடைந்துள்ளார். அவரது பிரச்சார அறிவிப்புகளின் மீது யூத எதிர்ப்பு குறியீடுகள் தொடர்ச்சியாக ஒட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் ஆறு தேர்தல் வெற்றிகளை தவறவிட்ட காழ்ப்புணர்ச்சியால் சில எதிர்தரப்பு விஷமிகளால் தான் ஏன் குறிவைக்கப்படுகிறார் என்று தனக்கு தெரியாது என்று மரியம் இஷாக் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அவரின் தேர்தல் பிரசார பதாதைகளின் மேலாகRead More →

Reading Time: < 1 minuteஎஸ்கெரிச்சியா கோலி (Escherichia coli) எனப்படும் பக்றீரியா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படும் பெருந்தொகையான பதனிடப்படாத மாட்டிறைச்சி உற்பத்தி பொருட்களை கனடாவின் உணவு பரிசோதனை முகவரமைப்பு மீள அழைத்துள்ளது. ரொறென்றோவில் உள்ள இறைச்சிக் கூடமான ரைடிங்-ரீஜென்சி மீட் பெக்கர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் இவ்வாறு உற்பத்திப் பொருட்கள் மீளப் பெறப்பட்டன, அதேவேளை, கியூபெக்கில் உள்ள ஆல்ஃபா மீட் பெக்கர்ஸ் லிமிற்றெட்டால், ஒன்ராறியோவில் உணவு அடிப்படைகளுக்கு ஏற்ப பொதியிடப்பட்டRead More →

Reading Time: < 1 minuteஒன்ராறியோ மாகாணத்தில் கல்விசார் ஊழியர்களின் பணிநிறுத்த போராட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆயிரக்கணக்கான கல்விசார் ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் நேற்று இரவு (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை ஒன்றின் அடிப்படையில் தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பணிநிறுத்த போராட்டம் நேற்று நள்ளிரவு நிறைவடையவிருந்த கால எல்லைக்கு சில மணித்தியாலங்கள் முன்னதாக கல்வியமைச்சர் ஸ்டீஃபன் லீஸ்ஸி மற்றும் கனேடிய பொது பணியாளர்களின் ஒன்றியத்தின் பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇன்று காலை வேளையில் ஈஸ்ட் யோர்க் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தைக் கேட்ட மக்களிடம் இருந்து காவல்துறையினர் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். ஈஸ்ட் யோர்க் தொழிற்சாலைகள் சார் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக இன்று அதிகாலை இரண்டு மணியளவில் தமக்கு முறைப்பாடு கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து Victoria Park Avenueவிற்கு மேற்கே, O’Connor Drive மற்றும்Read More →

Reading Time: < 1 minuteரொரன்ரோ நகரின் ஈட்டோபிக்கோ ஜேம்ஸ் டவுன் குடியிருப்புப் பகுதி மற்றும் வோலஸ் எமேர்சன் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பலத்த காயங்களுக்கு உள்ளான இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதலாவது சம்பவம் நேற்று மாலை 5:30 அளவில், Finch Avenue West மற்றும் Martin Grove வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்ததாகவும், சம்பவ இடத்தில் சுமார்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியா- சர்ரே பகுதியில் பெண்னொருவரின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், ஒருவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டவுன்ஹவுஸ் வளாகம் 5800 தொகுதி- 122ஆவது வீதியில் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், ஒருவரை பொலிஸ் காவலில் வைத்துள்ளனர். ஆணும் பெண்னும் ஒருவருக்கொருவர் தெரிந்திக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த மரணம்Read More →

Reading Time: < 1 minuteமோல்சன் பகுதியில் துப்பாக்கி முனையில் இருவரிடம் கொள்ளையிட்டு சென்ற, ஒருவரை மனிடோபா பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர். வின்னிபெக்கின் ஆலன் ரைக்கிள் ஷினிட்கர் என அடையாளம் காணப்பட்டுள்ள அவர், ஆபத்தானவர் எனவும், அவரிடம் பொதுமக்கள் அணுக வேண்டாமென எச்சரிக்கப்படுகின்றனர். இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்காக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஷ்னிட்கர் 30, ஐந்து அடி 10 அங்குலம் மற்றும் 161 பவுண்ஸ்கள், பழுப்பு நிற முடிRead More →

Reading Time: < 1 minuteகிழக்கு எல்ம்வூட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் உயிராபத்தற்ற நிலையில், சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். 50 ப்ரீவெட் வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது மாடியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புப் படையினர் வருவதற்குள் குடியிருப்பாளர்கள் கட்டிடத்திலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலும்,Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு நியூமார்கட் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்து விட்டதாகவும், பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யோர்க் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Yonge Street மற்றும் Mulock Drive பகுதிக்கு தென்மேற்கே, Colter Street பகுதியில், நேற்று இரவு ஒன்பது மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு விரைந்ததாகவும்,Read More →

Reading Time: < 1 minuteநேற்று இரவு பிரம்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான உந்துருளி ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு வாகனங்கள் தொடர்புபட்ட இந்த விபத்து, Bovaird Drive Westற்கு வடக்கே, Worthington Avenue மற்றும் Clayborne Avenue பகுதியில் நேற்று இரவு 10:15 அளவில் இடம்பெற்றுள்ளது. உந்துருளி ஒன்றும் கார் ஒன்றும் மோதுண்டதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அங்கே பலத்த காயங்களுடன் காணப்பட்ட உந்துருளிRead More →

Reading Time: < 1 minuteரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வைத்து வாகனம் ஒன்றினால் மோதுண்ட இரண்டு வயதுச் சிறுவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Queen Street Westற்குத் தெற்கே, Richmond Street West மற்றும் Simcoe Street பகுதியில் நேற்று இரவு 7:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த அந்தச் சிறுவன் தனது தாயாருடன் வீதியைக் கடந்து கொண்டிருந்த போது, அந்த வீதிச் சந்திப்புப் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த ட்ரக்Read More →

Reading Time: < 1 minuteவான்கூவரின் வெஸ்ட் எண்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை உடைத்ததாகக் கூறப்படும் மூன்று பேரை, பிரிட்டிஷ் கொலம்பியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரே குறித்த சம்பவத்தின் போது, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு 10 மணிக்குப் பிறகு வான்கூவர் பொலிஸார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். டென்மன் மற்றும் ராப்சன் வீதிகளுக்கு அருகிலுள்ள குடியிருப்பில், குறித்த வீடுடைப்புRead More →

Reading Time: < 1 minuteபிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது, தேறி வருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர். பேஃலி வீதிக்கு தெற்கே புரோக் வீதி மற்றும் டிலிங்ஹாம் வீதிப் பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்றின் சாரதி சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில், இவ் விபத்து குறித்த தீவிர விசாரணைகளைRead More →

Reading Time: < 1 minuteஎஸ்.ஏ. சந்திரசேகர் தன்னிடம் ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் தெரிவித்துள்ள புகார் தொடர்பாக எஸ்.ஏ. சந்திரசேகரின் ‘கிரீன் சிக்னல்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நடிகர் விஜய் தந்தையும் திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் மீது, ரூ. 21 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, கனடா நாட்டைச் சேர்ந்த பிரம்மானந்தம் சுப்பிரமணியன் சார்பாக மணிமாறன் என்பவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில்Read More →

Reading Time: < 1 minuteரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் உள்ள தொடரூந்து நிலையம் ஒன்றில் வைத்து ஆண் ஒருவர் கத்திக் குத்துத் தாக்குதலுக்கு உள்ளான நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரதணைகளை மேற்கொண்ட ரொரன்ரோ காவல்துறையினர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். புதன்கிழமை இரவு சென் அன்ட்ரூ தொடரூந்தி நிலையத்தில் சிலருக்கு இடையே மோதல் இடம்பெற்றதாகவும், இதன்போது ரொரன்ரோவைச் சேர்ந்த 62 வயதான தோமஸ் டெனி என்பவர் கத்திக் குத்துக்கு இலக்கானதாகவும், சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteநேற்று பிற்பகல் வேளையில் பிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இருவரும் உலங்குவானூர்தி மூலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். Bayly Streetற்குத் தெற்கே, Brock Road மற்றும் Dillingham Road பகுதியில் நேற்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றதனை டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதேவேளை இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்றின் சாரதி சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteஓஷாவாவின் வடக்கே கிராமப்புற வீதி ஒன்றில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், வயதான பெண் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக டூர்ஹம் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Purple Woods Conservation பகுதியில், Simcoe வீதியில் நேற்று காலை 8:30 அளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. தகவல் அறிந்து தாங்கள் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது, அங்கே வெள்ளை நிற பிக்கப் ரக வாகனம் ஒன்று முழுதாக எரிந்தRead More →