Reading Time: < 1 minuteகனடா அரசாங்கத்தின் இரகசிய தகவல்களை திருடியதாக அந்நாட்டின் உளவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை உளவுத்துறை அதிகாரிகள் அவரை கைதுசெய்து, கனடாவின் குற்றவியல் சட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஐந்து வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கனடாவின் றோயல் மவுன்டட் பொலிஸ் என்ற புலனாய்வு அமைப்பின் முன்னாள் ஆணையாளர் பொப் பால்சன் என்பவரின் ஆலோசகராக இருந்த மூத்த உயர் அதிகாரியான கமரூன் ஆர்டிஸ் புலனாய்வுத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில், இரண்டு வாரங்களுக்கு முன்னர் காணாமற்போயுள்ள 13 வயது சிறுமி தொடர்பாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். அட்ரியன் டோரியன் என்ற குறித்த சிறுமி கடைசியாக ஓகஸ்ட் 24 அன்று காலை 10:30 மணிக்கு இருந்துள்ளார். இந்நிலையில் காணாமற் போயுள்ள குறித்த சிறுமி, ஐந்து அடி உயரம், நடுத்தர நீள சிவப்பு முடி, பழுப்பு நிற கண்கள் மற்றும் கண்ணாடி அணிந்திருப்பார் என பொலிஸார் அடையாளங்களை குறிப்பிட்டுள்ளனர். இந்த சிறுமி தொடர்பாகRead More →

Reading Time: < 1 minuteடோரியன் புயலில் சிக்கி உயிரிழந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவுள்ளது. பஹாமாஸ் தீவுகளில் புயலும் கன மழையும் தாக்கிய நிலையில், அங்குள்ள மக்களுக்கு உதவுங்கள் என அலிஷியா சப்ரினா லியோலி (வயது-27) என்ற இளம் பெண் பல்வேறு இணையதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வந்தார். கனேடியரான லியோலி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்துவந்த நிலையில் கடந்தRead More →

Reading Time: 2 minutesஸ்காபரோ ஹைலான்ட் கிறீக் குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை ரொரன்ரோவைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 38 வயது தமிழ் ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது முதல்தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர். எல்ஸ்மெயர் வீதி மற்றும் கொன்லின்ஸ் வீதிக்கு அருகே, ஃபிஷரி வீதியில் புதன்கிழமை இரவு 6:15 அளவில் இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteவீடு ஒன்றில் வைத்து 34 வயது ஆண் ஒருவர் மீது காவல்துறையினர் மின் அதிர்ச்சித் தாக்குதலை மேற்கொண்ட வேளையில் குறித்த அந்த ஆண் உயிரிழந்த சம்பவம் மிசிசாகாவில் இடம்பெற்றுள்ளது. Morning Star drive மற்றும் Goreway drive பகுதியில் குழப்பகரமான சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தினைச் சென்றடைந்த அதிகாரிகளுக்கும் அங்கிருந்த ஆண் ஒருவருக்கும் இடையே முறுகல்Read More →

Reading Time: < 1 minuteஃபுளோரிடாவில் இடம்பெற்ற ஒரு தாக்குதல் சம்பவத்தின் போது கனேடிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஆண் ஒருவரை ஃபுளோரிடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஃபுளோரிடாவின் பனாமா சிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து, கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்ட அவர், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக திங்கட்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த 33 வயதான அந்த கனேடிய படை வீரர், வடஅமெரிக்க வான்Read More →

Reading Time: < 1 minuteமார்க்கம் பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஸ்னா பார்க் ட்ரைவ் மற்றும் அல்டென் வீதிப் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து சம்பவித்ததனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சிறிதளவு விபரங்களை மட்டுமே வெளியிட்ட காவல்துறையினர், விசாரணைகளுக்காக வீதி மூடப்பட்டிருக்கும் என்று சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் தகவல் வெளியிட்டபோது தெரிவித்திருந்தனர்.Read More →

Reading Time: < 1 minuteடிரான்ஸ்லிங்கின் முதல் மின்கல மின்சார பேருந்துகள் மெற்ரோ வன்கூவரில் உள்ள வீதிகளில் சேவைகளில் ஈடுப்பட்டுள்ளன. மாசை ஏற்படுத்தும், புகையை குறைக்கும் ஒரு திட்டமாக குறித்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பேருந்துக்கள் பர்னாபி மற்றும் நியூ வெஸ்ற்மின்ஸ்ரர் ஆகிய இடங்களில் பயணிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.மேலும், இதுபோன்ற ஆறு பேருந்துகள்; கொண்டு வரப்படுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது. வன்கூவரில் ஏராளமான மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதால், மின்சார பேருந்துகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் எனRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பொதுத் தேர்தலுக்கான 40 நாள் பரப்புரைகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று காலையில் ஆளுநர் நாயகம் ஜுலி பயாட்டியைச் சந்திக்கவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நாடாளுமன்றைக் கலைக்குமாறான வேண்டுகோளை அவரிடம் விடுக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று வன்கூவர் செல்லவுள்ள பிரதமர் ரூடோ, அங்கே லிபரல் சார்பில் போட்டியிடும் முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளர் தாமரா தக்ரட்டுடன் இணைந்து, அங்கு இடம்பெறும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை பழமைவாதக் கட்சித் தலைவர் ஆன்ட்ரூRead More →

Reading Time: < 1 minuteமூன்று ஆண்டுகளின் முன்னர், 2016ஆம் ஆண்டில், லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய உதவுவோருக்கு 50,000 டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இதே நாள் அதிகாலை வேளையில், தனது மனைவி மற்றும் ஏனைய நண்பர்களுடன் பிறந்தநாள் வைபவம் ஒன்றிலிருந்து வெளியேறிய KiesingarRead More →