Reading Time: < 1 minuteடோரியன் புயலில் சிக்கி உயிரிழந்த கனேடிய இளம் பெண்ணின் சடலம் இன்னும் சில தினங்களில் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவுள்ளது. பஹாமாஸ் தீவுகளில் புயலும் கன மழையும் தாக்கிய நிலையில், அங்குள்ள மக்களுக்கு உதவுங்கள் என அலிஷியா சப்ரினா லியோலி (வயது-27) என்ற இளம் பெண் பல்வேறு இணையதள பக்கங்களில் கோரிக்கை விடுத்து வந்தார். கனேடியரான லியோலி, கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பஹாமாஸ் தீவில் குடியிருந்துவந்த நிலையில் கடந்தRead More →

Reading Time: 2 minutesஸ்காபரோ ஹைலான்ட் கிறீக் குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை ரொரன்ரோவைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 38 வயது தமிழ் ஆண் ஒருவரைக் கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது முதல்தர கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்துள்ளனர். எல்ஸ்மெயர் வீதி மற்றும் கொன்லின்ஸ் வீதிக்கு அருகே, ஃபிஷரி வீதியில் புதன்கிழமை இரவு 6:15 அளவில் இந்த வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்தப் பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteவீடு ஒன்றில் வைத்து 34 வயது ஆண் ஒருவர் மீது காவல்துறையினர் மின் அதிர்ச்சித் தாக்குதலை மேற்கொண்ட வேளையில் குறித்த அந்த ஆண் உயிரிழந்த சம்பவம் மிசிசாகாவில் இடம்பெற்றுள்ளது. Morning Star drive மற்றும் Goreway drive பகுதியில் குழப்பகரமான சம்பவம் இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தினைச் சென்றடைந்த அதிகாரிகளுக்கும் அங்கிருந்த ஆண் ஒருவருக்கும் இடையே முறுகல்Read More →

Reading Time: < 1 minuteஃபுளோரிடாவில் இடம்பெற்ற ஒரு தாக்குதல் சம்பவத்தின் போது கனேடிய படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் ஆண் ஒருவரை ஃபுளோரிடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஃபுளோரிடாவின் பனாமா சிட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே வைத்து, கடந்த சனிக்கிழமை தாக்கப்பட்ட அவர், தலையில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக திங்கட்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த 33 வயதான அந்த கனேடிய படை வீரர், வடஅமெரிக்க வான்Read More →

Reading Time: < 1 minuteமார்க்கம் பகுதியில் நேற்று பிற்பகல் வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஆண் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். எஸ்னா பார்க் ட்ரைவ் மற்றும் அல்டென் வீதிப் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து சம்பவித்ததனை யோர்க் பிராந்திய காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சிறிதளவு விபரங்களை மட்டுமே வெளியிட்ட காவல்துறையினர், விசாரணைகளுக்காக வீதி மூடப்பட்டிருக்கும் என்று சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் தகவல் வெளியிட்டபோது தெரிவித்திருந்தனர்.Read More →

Reading Time: < 1 minuteடிரான்ஸ்லிங்கின் முதல் மின்கல மின்சார பேருந்துகள் மெற்ரோ வன்கூவரில் உள்ள வீதிகளில் சேவைகளில் ஈடுப்பட்டுள்ளன. மாசை ஏற்படுத்தும், புகையை குறைக்கும் ஒரு திட்டமாக குறித்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பேருந்துக்கள் பர்னாபி மற்றும் நியூ வெஸ்ற்மின்ஸ்ரர் ஆகிய இடங்களில் பயணிகளை அழைத்துச் சென்றதாக கூறப்படுகின்றது.மேலும், இதுபோன்ற ஆறு பேருந்துகள்; கொண்டு வரப்படுமென என்று எதிர்பார்க்கப்படுகிறது. வன்கூவரில் ஏராளமான மக்கள் போக்குவரத்தை மேற்கொள்வதால், மின்சார பேருந்துகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் எனRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பொதுத் தேர்தலுக்கான 40 நாள் பரப்புரைகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று காலையில் ஆளுநர் நாயகம் ஜுலி பயாட்டியைச் சந்திக்கவுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, நாடாளுமன்றைக் கலைக்குமாறான வேண்டுகோளை அவரிடம் விடுக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து இன்று வன்கூவர் செல்லவுள்ள பிரதமர் ரூடோ, அங்கே லிபரல் சார்பில் போட்டியிடும் முன்னாள் தொலைக்காட்சி செய்தியாளர் தாமரா தக்ரட்டுடன் இணைந்து, அங்கு இடம்பெறும் பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார். இதேவேளை பழமைவாதக் கட்சித் தலைவர் ஆன்ட்ரூRead More →

Reading Time: < 1 minuteமூன்று ஆண்டுகளின் முன்னர், 2016ஆம் ஆண்டில், லிபேர்ட்டி விலேஜ் பகுதியில் வைத்து நான்கு பிள்ளைகளின் தந்தையான 26 வயது ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியைக் கைது செய்ய உதவுவோருக்கு 50,000 டொலர்கள் சன்மானமாக வழங்கப்படும் என்று காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி இதே நாள் அதிகாலை வேளையில், தனது மனைவி மற்றும் ஏனைய நண்பர்களுடன் பிறந்தநாள் வைபவம் ஒன்றிலிருந்து வெளியேறிய KiesingarRead More →

Reading Time: < 1 minuteசீமெந்துக் கலவையைச் சுமந்துசெல்லும் கனரக வாகனம் மோதியதில் 54 வயதுப் பெண் ஒருவர் பலியான சம்பவம் ரொரன்ரோ மிட்டவுன் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. எக்ளிங்டன் அவனியூ பகுதியில், Yonge Street மற்றும் Erskine Avenueவில் நேற்று முற்பகல் பத்து மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதனை ரொரன்ரோ காவல்துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த அந்தப் பகுதியில் Yonge Streetஇல் வீதியைக் கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்து திரும்பிய கனரக வாகனம் பெண்Read More →

Reading Time: 2 minutesஉலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யாருடைய உதவியும் இன்றி உலகத்தை சுற்றிவந்த படகோட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த வருடம் ஒக்ரோபர் 3 ஆம் திகதியில் இருந்து இந்த மாதம் 7 வரையான 330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய டொலர், அமெரிக்க டொலருக்கு எதிராக கடந்த ஆறு வாரங்களில் வலுப்பெற்ற நிலையை நேற்று (செவ்வாய்க்கிழமை) அடைந்துள்ளது. சில முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததை விட கடந்த வாரம் அபாய இழப்பில் முன்னேற்றம் மற்றும் கனடா டொவிஷ் வங்கியின் குறைந்த கொள்கை அறிவிப்பு ஆகியவற்றால் இந்த நிலை எட்டப்பட்டுள்ளது. கனடா வங்கி கடந்த புதன்கிழமை வட்டி விகிதங்களை சீராக வைத்திருந்ததுடன், யு.எஸ். ஃபெடரல் ரிசர்வ் உட்பட அதன் சில உலகளாவிய பங்காளர்களால் இந்தRead More →

Reading Time: < 1 minute“கௌரவக் கொலை” என்று அழைக்கப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் நாட்டிற்குள் நுழைந்தாரா என்பதைக் கண்டுபிடிக்க கனடா அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இஹாப் கிரயேப் என்பவர் அவரது சகோதரி இஸ்ரா கிரயேப்பின் வன்முறையான மரணத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகளில் ஒருவராக மத்திய கிழக்கு முழுவதிலும் வெளியான செய்திகளில் பெயரிடப்பட்டார். மேற்குக் கரையில் சினத்தை ஏற்படுத்தியது மாத்திரமன்றி, ஆர்ப்பாட்டங்களையும் தூண்டிய ஒரு கொலைச் சம்பவமாக இது கருதப்படுகின்றது. அந்த செய்தி அறிக்கைகள் பலவும்Read More →

Reading Time: < 1 minuteபஹாமாஸில் ஆரம்பித்து அட்லாண்டிக் பிராந்திய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டொரியன் புயல் கனடாவையும் பதம் பார்த்தது. இதன்காரணமாக, அங்கு பல்லாயிரக்கணக்கான வீடுகள் தொடர்ந்தும் மின்சார வசதியின்றி இருளில் மூழ்கியுள்ளன. மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அனைத்து பொதுப் பாடசாலைகள் உட்பட நிறுவனங்களும் செயலிழந்துள்ளன. சக்திவாய்ந்த டொரியன் புயலுக்கு பின்னர், நோவா ஸ்கோடியா முழுவதும் மரங்கள் முறிந்து வீழ்ந்த பலRead More →

Reading Time: < 1 minuteகனடா நாட்டின் வட பகுதியில் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்கு சீனாவின் ஹூவாவே நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எனினும், சீனாவின் இந்த முயற்சியை கனடாவின் பல தரப்பினர் ஒரு ‘ட்ரோஜன் குதிரை’ சதித்திட்டமாக இருக்கக்கூடும் என்று கவலைவெளியிட்டுள்ளனர். குறித்த அதிவேக இணைய சேவை திட்டம் ஆர்க்ரிக் வலயத்தில் நிலைநிறுத்தப்படும் ‘சுப்பர் பவர்’ விமானங்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்மூலமாக கனடாவின் வட பிராந்தியத்திற்கான அதிவேக இணைய சேவை தங்கு தடையின்றிRead More →

Reading Time: < 1 minuteபஹாமாஸ் மற்றும் கனடா நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய டொரியன் புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தின் போது மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பஹாமஸ் தீவுகளை அண்மையில் டோரியன் புயல் தாக்கியது. இதில் பொதுமக்கள் 43 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காணாமல் போயிருந்தனர். இந்தநிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டம் இடம்பெற்றது. கூட்டம் ஆரம்பித்ததும் பஹாமஸ் தீவுகளில் டோரியன்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அனைத்து நகரபிதாக்களும் இன்று பிற்பகல் ரொரன்ரோவில் ஒன்றுகூடி, போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் அவற்றைச் சரிசெய்வதற்கான கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்துள்ளனர். கனேடிய தேசிய நகரப் போக்குவரத்துக கழக அதிகாரிகள் மாநாடு இடம்பெறும் இந்த நிலையில், அந்த மாநாடு இடம்பெறும் சென் லோறன்ஸ் மார்கெட் பகுதியில் நகரபிதாக்களின் இந்தத் தனிப்பட்ட சந்திப்பு இன்று பிற்பகல் ஒரு மணிக்கு தொடங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து ஏற்பாடுகளுக்காக மத்திய அரசின் நிதி வழங்கும் திட்டம்Read More →

Reading Time: < 1 minuteதான் ஒரு காவல்துறை உத்தியோகத்தர் என்று தெரிவித்து வயதான தம்பதியரிடம் மோசடி செய்த பெண் ஒருவர் தொடர்பில் ரொரன்ரோ காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலந்தைச் சேர்ந்த குறித்த அந்த தம்பதியரை வியாழக்கிழமை பிற்பகல் 1:30 அளவில் தொலைபேசி வாயிலாக அழைத்த அந்த இனந்தெரியாத பெண், அந்தத் தம்பதியரிடம் போலந்து மொழியில் பேசியதாகவும், தன்னை ஒரு அதிகாரியாக இனங்காட்டிக்கொண்ட அந்தப் பெண், குற்றக் குழு ஒன்றைக் கைது செய்வதற்கான சட்டRead More →