Reading Time: < 1 minuteகனடாவில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போது குறித்த இளைஞன் உள்ளுர் நேரப்படி இரவு 8.20 அளவில் விபத்துக்கு முகம்கொடுத்ததாக விசாரணைகளில் போது தெரியவந்தது. உயிரிழந்த இளைஞர் 17 வயது மதிக்கத்தக்க சாமுவேல் டேன் குமார்Read More →

Reading Time: < 1 minuteஇந்த மாதத்தின் ஆரம்பத்தில், ஸ்காபரோவில் வீதியைக் கடக்க முயன்ற சமயம் வாகனத்தினால் மோதுண்டு படுகாயமடைந்த 97 வயது முதியவர் ஒருவர், தற்போது உயிரிழந்து விட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். கடந்த ஆறாம் திகதி காலையில், மக்நிக்கோல் அவனியூவுக்கு வடக்கே, வார்டன் அவனியூ பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற சமயம், 28 வயது ஆண் ஒருவர் தெற்கு நோக்கிச் செலுத்திவந்த ஹொண்டா சிவிக் ரக வாகனம் அவர் மீது மோதியது. ஆபத்தான காயங்களுடன்Read More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க் பகுதியில் TTC பேருந்தில் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட நபர் ஒருவரின் கண்காணிப்பு ஒளிப்பதிவு படங்களை வெளியிட்டுள்ள காவல்துறையினர், அவரைத் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணியளவில், Graydon Hall Drive மற்றும் Graydon Hall Place பகுதியில் பேருந்தினுள் கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட அவர், அந்தப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்துமிடம் ஒன்றில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 35 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கைகளில் பெருமளவில் பச்சைRead More →

Reading Time: < 1 minuteகடந்த வாரம் ஸ்காபரோ ஆர்ம்டேல் குடியிருப்பு பகுதியில் வைத்து 25 வயதான சாரங்கன் சந்திரகாந்தன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், தற்போது ஒருவரைக் கைது செய்துள்ளனர். கடந்த 19ஆம் திகதி இரவு 9:50 அளவில், மிடில்ஃபீல்ட் வீதிப் பகுதியில், மக்நிக்கோல் அவனியூவில் மேற்கொள்ப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் சாரங்கன் படுகாயமடைந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர மருத்துவப் பிரிவினர் அவருக்கு உயர்காப்பு சிகிச்சைகளை வழங்கியRead More →

Reading Time: < 1 minuteசுற்றுலா நோக்கில் இந்தியாவுக்கு சென்றிருந்த கனடா பெண்ணொருவர் குதிரையில் சவாரி செய்த போது கீழே வீழ்ந்து காயங்களுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்த போது பிறிதொரு குதிரையோட்டி தன்னை அச்சுறுத்தியதாகவும், இதனை தான் பயணித்த குதிரை மிரண்டு போய் தன்னை கீழ் தள்ளிவிட்டு ஓடியதாக அவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். இந்த குதிரையை வைத்து கனடா பெண்ணை அச்சுறுத்தியதாக கூறப்படும் குதிரை ஓட்டியான செந்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் லிபரல் கட்சி மற்றும் கொன்சவேட்டிவ் கட்சிகளுக்கு இடையில் பாரிய போட்டி நிலவும் என்று கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. லிபரல் கட்சித் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோவின் விநோத கறுப்பு முகம் மற்றும் பிளாக்ஃபேஸ் ஊழலை அடுத்து லிபரல் கட்சியினரின் ஆதிக்கம் வீழ்ச்சியடைவதால் கொன்சர்வேடிவ் கட்சியினர் நான்கு புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளதாக இப்சோஸ் கருத்துக் கணிப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. செப்டம்பர் 20 மற்றும் 23Read More →

Reading Time: < 1 minuteநோர்த் யோர்க் பகுதியில் குப்பைத் தொட்டியினுள் இன்று காலை மனித உடல்ப் பாகம் என நம்பப்படும் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். Harrison Garden Boulevard மற்றும் Oakburn Crescent பகுதியில் இன்று காலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள கட்டிடம் ஒன்றின் குப்பை சேகரிக்கும் பெட்டியினுள் இருந்து மனித உடற்பாகம் என நம்பப்படும் பொருள் ஒன்று வெளியே நீட்டிக்கொண்டிருப்பதை அவதானித்த மேற்பார்வையாளர்Read More →

Reading Time: < 1 minuteபிரம்டனில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை சில துப்பாக்கிகளும் போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் இரண்டு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். Williams Parkway மற்றும் Kennedy Roadஇல் உள்ள குறித்த அந்த வீட்டில் கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது இவை கைப்பற்றப்பட்டதாக பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்கிருந்து சுமார் 23,000 டொலர்கள் பெறுமதியான ஹொக்கெய்ன் வகை போதைப் பொருள், ஒருRead More →

Reading Time: < 1 minuteகனடாவை சேர்ந்த பெண் சாரா லேண்ட்ரி. இவர் இந்தியா வந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் ருத்ரகன்னியாக துறவறம் பெற்றார். பின்னர் நித்தியானந்தாவால் ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்ப பிரியானந்தா என பெயர் சூட்டப்பட்டார். இந்நிலையில், சமீபத்தில் பிரியானந்தா வெளியிட்ட காணொளியில், நித்தியானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். அதில், “கடந்த 2017ஆம் ஆண்டு நித்தியானந்தாவால் திருவனந்தபுரத்தில் உள்ள குருகுலத்திற்கு செல்ல பணிக்கப்பட்டேன். அங்குள்ள சிறுவர் சிறுமிகளுக்குRead More →

Reading Time: < 1 minuteBradford பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் Barrie பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும், அவரது மகனும் ஒன்பது வயதாக பேரனும் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதுண்ட இந்த விபத்து, 14th Lineற்கு தெற்கே, Yonge Street பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 4:30 அளவில் சம்பவித்துள்ளது. தகவல் அறிந்து தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைந்த வேளையில், அந்த வீதியில் வடக்குRead More →

Reading Time: < 1 minuteநேற்று காலை வேளையில் நோர்த் யோர்க் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன்போது காயமடைந்த ஒரு தீயணைப்பு படை வீரர் உள்ளிட்ட இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Wilson Avenue west மற்றும் Allen Road பகுதியில், வர்த்தக நிறுவனம் ஒன்றின் மேலே அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், நேற்று அதிகாலை 3:20 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றடைந்த ரொரன்ரோRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் சாஸ்கடூன் நகரில் எரிவாயு நிரப்பு நிலையத்தின் புதிய ஊழியர் மீது இனவெறித் தாக்குதல் மேற்கொண்டதாக 45 வயது மதிக்கத்தக்க வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருந்ததாக அதனை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர். ஹிதாயத் உல்லா என்பவர் வாமன் வீதியில் உள்ள எரிவாயு நிரம்பு நிலையத்தில் வழமையான காலை பணிகளை மேற்கொண்டிருந்த போது, அங்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர்,Read More →