கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது!
Reading Time: < 1 minuteகியூபெக்கில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கியூபெக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வீடொன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீவியின் உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ShareTweetPin0 SharesRead More →