Reading Time: < 1 minute

மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய ரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப்பூசி மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரொறொன்ரோ கன்வென்ஷன் சென்டருக்குள் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோ அவர்களுக்கு கிடைக்கும் எல்லா இடங்களையும் பயன்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.

இது காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை, வாரத்தில் ஏழு நாட்கள், குறைந்தது ஆறு வாரங்களுக்கு திறந்திருக்கும்.

மருந்தகம் முக்கியமானது. ஏனெனில், இது மாகாணத்தில் அமையவுள்ள பொதுத் தடுப்பூசி தளங்களுக்கான கருத்துருக்கான ஆதாரமாக அமைகிறது.

ஒரு நாளைக்கு 250 தடுப்பூசி மருந்துகளை வழங்க எதிர்பார்ப்பதாக ஒன்றாரியோவின் தடுப்பூசி தொடக்கக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.