Reading Time: < 1 minute

ரொறன்ரோ மிருகக்காட்சிசாலையில் அரிய வகை பான்டா குட்டிகள் இரண்டு பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் அரிய வகையான சிகப்பு பான்டா குட்டிகளே இவ்வாறு பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சகுரா என்ற பான்டாவிற்கு இந்த இரண்டு குட்டிகளும் பிறந்துள்ளதாக மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தாய்ப் பான்டாவும் குட்டி பான்டாக்களும் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு பான்டா குட்டிகளையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக மிருகக்காட்சிசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொல்ப் டிஜொங் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ம் திகதி இந்த இரண்டு பான்டாக் குட்டிகளும் மிருகக்காட்சிசாலையில் பிறந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இமயமலை மற்றும் தென் சீனாவை பூர்வீகமாகக் கொண்ட இந்த வகை பான்டாக்கள் மிகவும் அரிய வகை உயிரினங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.