Reading Time: < 1 minute

ரொறன்ரோ பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நோயாளிகள் இருவரை அநாகரீகமான முறையில் தொட்டதாக குறித்த பல் மருத்துவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

36 வயதான சுனில் குமார் பாட்டெல் என்ற பல் மருத்துவர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டர்ஹம் பிராந்திய போலீசார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மருத்துவரை சந்திக்க சென்ற போது தம்மை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

எனவே குறித்த பல் மருத்துவர் எதிராக இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்தப் பல் மருத்துவர் வேறும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட எவரேனும் இருந்தால் அது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.