Reading Time: < 1 minute

கனடாவின் ரொறன்ரோவில் ஆயுதமுனையில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

57 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இளம் நபர் ஒருவரை குறித்த நபர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

புரொன்ட் மற்றும் பே வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலியல் ரீதியாக துன்புறுத்தி, தாக்கியதுடன், உடைமைகளையும் சேதப்படுத்தியதாக குறித்த 57 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்ற நபரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

57 வயதான ஜோயல் டேவிட் அர்சன்யேயு என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

16 வயதிற்கும் குறைந்தவர்கள் மீது பாலியல் குற்றச்செயல் மேற்கொண்டதாக இந்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.