Reading Time: < 1 minute

ரொன்றோவில் கொள்ளை முயற்சியுடன் தொடர்புடைய இருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டது.

பொலிஸார் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

கடந்த 20 ஆம் திகதி யோங் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வயது முதிர்ந்த ஒருவரிடம் பாதை ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கு எவ்வாறு செல்வது என கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதையை பற்றி கேட்பது போன்று அருகாமையில் சென்று குறித்த வயோதிபரின் காற்சட்டை மற்றும் சட்டை பைகளில் இருக்கும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட முயற்சிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு எனினும் சம்பவம் இடம்பெற்ற போது குறித்த வயோதிபரிடம் பணம் எதுவும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ஆணின் வயது 35 முதல் 43 வயதாக இருக்கலாம் எனவும் பெண்ணின் வயது சுமார் 30 ஆக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.