Reading Time: < 1 minute

கனடாவின் மிஸிஸாகா பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

காயம் அடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சென்ட்ரல் பார்க்வே மற்றும் ஜோன் டிரைவ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பீல் பிராந்திய பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த இடத்தில் துப்பாக்கிச் சூடு அல்லது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்று இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எவ்வாறான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்த தகவல்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை.

தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர்களுக்கு உயிர் ஆபத்து கிடையாது என பீல் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பொலிஸார் இதுவரையில் வெளியிடவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.