Reading Time: < 1 minute

மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒண்டாரியோ மாகாண போலீசாரின் தகவலின்படி, ஹைவே 407-ல் இன்று காலை இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த வாகன விபத்தில் வாகனத்தின் சாரதி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கிழக்கு நோக்கி செல்லும் வழியில் மார்கம் நகரில் உள்ள கென்னெடி வீதிக்கு அருகாமையில் காலை 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தில் ஓட்டுநர் மட்டுமே இருந்தார், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்துக்குப் பின்னர், அதிவேக நெடுஞ்சாலை இலக்கம்407-இன் கிழக்கு நோக்கி செல்லும் அனைத்து வழிகளும் வூட்பைன் அவென்யூ முதல் வார்டன் அவென்யூ வரை மூடப்பட்டன.

இதனால், அந்த பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள் முன்கூட்டியே மாற்று வழிகளை தேர்வு செய்யுமாறு பொலிஸார் அறிவுறுத்தியிருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.