Reading Time: < 1 minute

மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடா நாட்டை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், அது குறித்து மன்னர் சார்லசிடமே பேசுவது என ட்ரூடோ முடிவு செய்துள்ளார்.

மன்னர் சார்லசுடைய தலைமையின் கீழ் பிரித்தானியா மட்டுமின்றி அவுஸ்திரேலியா, கனடா, Grenada, ஜமைக்கா, நியூசிலாந்து, பாப்புவா நியூகினியா உட்பட மொத்தம் 15 நாடுகள் உள்ளன என்பதை பலரும் அறிந்திருக்கக்கூடும்.

ஆக, கனடாவின் தலைவரும் மன்னர் சார்லஸ்தான்.

இந்நிலையில், மன்னர் சார்லசின் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் கனடாவை, அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக மிரட்டிக்கொண்டே இருக்கிறார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.

ஆனால், இதுவரை அது குறித்து மன்னர் சார்லஸ் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. அதனால், கனேடிய மக்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.

சமூக ஊடகமான எக்ஸில் கனேடியர்கள் மன்னர் மீதான வருத்தத்தை வெளிப்படுத்திவருகிறார்கள்.

இந்நிலையில், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, இன்று மன்னர் சார்லசை சந்திக்கிறார்.

ட்ரூடோ மன்னரை சந்திக்கும்போது, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துக்கொண்டிருக்கும் விடயம் குறித்த பிரச்சினையை மன்னர் முன் எழுப்ப இருக்கிறார் ட்ரூடோ.

Comments are closed, but trackbacks and pingbacks are open.