Reading Time: < 1 minute

கனடாவின் டொரன்டோ பீல் பிராந்தியத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

விமான நிலைய வீதியில் ஓர் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தில் இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு எனினும் ஒருவருக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறு காயம் ஏற்பட்ட நபர் சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரம்டனில் மற்றும் ஒரு துப்பாக்கி சுட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.