Reading Time: < 1 minute

டொராண்டோவில் அமைந்துள்ள புகழ்பெற்ற குழந்தைகளுக்கான மருத்துவமனையான Hospital for Sick Children (SickKids)-இல் பணியாற்றும் வைத்தியர் ஒருவர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான இணையவழி விசாரணையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

டொராண்டோ பொலிஸாரின் Internet Child Exploitation (ICE) பிரிவு, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் ஒரு மின்னணு சாதனம் மூலம் அணுகப்பட்டு பதிவிறக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவலைத் தொடர்ந்து, 2026 ஜனவரி மாதத்தில் விசாரணையை ஆரம்பித்தது.

இதனைத் தொடர்ந்து, 2026 பெப்ரவரி மாதத்தில் Hospital for Sick Children மற்றும் தனியார் வீடொன்றில் தேடுதல் உத்தரவுகள் அமுல்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது, பணியிடக் கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் டிலன் திசாநாயக்க (Dilan Dissanayake) என்பவர் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையின்போது, பணியிடக் கணினி உட்பட பல மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த நிலையில், டொராண்டோவைச் சேர்ந்த 44 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வைத்தியர் டிலன் திசாநாயக்க (Dilan Dissanayake) என்பவர் செவ்வாய்க்கிழமை (21) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் Hospital for Sick Children வைத்திசாலையின் வைத்தியராக பணியாற்றுவதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சிறார் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்கள் அவரது மருத்துவப் பணியுடன் தொடர்புடையவை என்பதற்கான எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

அவர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான உள்ளடக்கங்களை வைத்திருந்தமை மற்றும் அவற்றை அணுகியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.