Reading Time: < 1 minute

சினோபெக் நிறுவனத்தின் முதலாவது எரிபொருள் தொகுதி இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டாவது எரிபொருள் தொகுதி நாளை வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு சந்தையில் புதிய சில்லறை விற்பனையாளர்களின் நுழைவு பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி தேவைகளை எளிதாக்கும் என்று எரிசக்தி அமைச்சர் கூறியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலைய விநியோகஸ்தர்களுடனான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு இறுதி செய்யப்பட்டதன் பின்னர் நாடளாவிய ரீதியில் 150 எரிபொருள் நிலையங்களுடன் செயற்பாடுகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.