அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதலே வரி விதிப்பு என்பது பாரிய பேசுபொருளாக இருந்து வருகிறது. அதிலும் அயல் நாடான கனடா மீது வர்த்தக போரை அறிவிக்கும் வண்ணம் இரு நாடுகளும் பிரச்சனையை பெரிதாக்கி கொண்டே செல்கிறது.
இந்நிலையில் டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டல் வெறும் மிரட்டலாக இல்லாமல் நாளை முதல் கனேடிய மக்கள் மீது உண்மையாகவே தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எந்தெந்த பொருட்கள் விலை உயரும்?
ட்ரம்பின் வரி விதிப்பால் உடனடியாக எந்தெந்த பொருட்கள் விலை உயரக்கூடும் என்று பார்க்கலாம்.
முதலில் பாதிக்கப்பட இருப்பது மளிகைப்பொருட்கள்தான். அதுவும் குறிப்பாக எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்கள் விலை அதிகரிக்கலாம்.
ஃப்ளோரிடா ஆரஞ்சுகள் விஸ்கான்சின் cheddar வகை சீஸ் ஆகியவைதான் முதலில் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் பொருட்கள்.
கனேடியர்கள் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் பாதிக்கும் மேல் குறிப்பாக காய்கறிகள் பழங்கள் அமெரிக்காவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கு கனடா எப்படி எதிர்வினையாற்றப்போகின்றது என்பதை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.