Reading Time: < 1 minute

கனடாவின் டொராண்டோ நகரின் மையப்பகுதியில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 37 வயதுடைய பெண் மீது கட்டுப்பாட்டை இழந்த எஸ்.யு.வி கார் ஒன்று மோதியதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

இது குறித்து டொராண்டோ காவல்துறை சனிக்கிழமை பிற்பகல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் விவரங்களைத் தெரிவித்துள்ளது.

பாத்தர்ஸ்ட் தெருவில் வடக்கே நோக்கி வெள்ளை நிற நிசான் பாத்ஃபைண்டர் காரை 18 வயது இளைஞர் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

லான்ஸ்மவுண்ட் டிரைவ் அருகே சென்றபோது கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையின் மீது ஏறியுள்ளது. அப்போது கிழக்கு நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த அப்பெண்ணின் மீது கார் பலமாக மோதியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமையன்று உயிரிழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விபத்தை ஏற்படுத்திய ஜேக்கப் சான்செஸ் என்ற 18 வயது இளைஞரைச் சனிக்கிழமையன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது உயிரிழப்பை ஏற்படுத்தும் வகையில் ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டியதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் 2026 அக்டோபர் 30 அன்று டொராண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு டொராண்டோ நகரில் நடைபெறும் 34-வது கொடிய வாகன விபத்து இதுவாகும். இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை டொராண்டோ காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.