Reading Time: < 1 minute

கனடாவின் ஜாஸ்பர் பகுதியில் இடம்பெற்ற காட்டு தீ காரணமாக பாரிய அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் காட்டுத்தீ காரணமாக சுமார் 880 மில்லியன் காப்புறுதித் தொகை வழங்கப்பட வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடியா காப்புறுதி முகவர் நிறுவனம் இது தொடர்பான தகவலை வழங்கியுள்ளது. அல்பர்ட்டா மாகாணத்தில் பதிவான இரண்டாவது மிகப்பெரிய இயற்கை அனர்த்த சேதம் இது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு அல்பர்ட்டாவின் மெக்முரேய் பகுதியில் இடம்பெற்ற காட்டுத்தீ காரணமாக 4.4 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடிய வரலாற்றில் பதிவான மிகவும் மோசமான சேதம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 25 ஆயிரம் மக்கள் ஜாஸ்பர் தேசிய பூங்கா பகுதியை விட்டு இடம்பெயர நேரிட்டிருந்தது.

சுமார் 350 கட்டடங்கள் ஜாஸ்பர் பகுதியில் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.