Reading Time: < 1 minute

கனடாவில் இரண்டு பெண்களின் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் Joseph Ayala பற்றிய புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஹமில்டன் பொலிஸார் இந்த புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.

தனது உறவினர்களான இரண்டு பெண்களை 33 வயதான ஜோசப் ஆயிலா என்ற நபர் படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நபர் தொடர்பான புதிய புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இரண்டு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய குறித்த நபரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இட்டாபிகாக் பகுதியில் வீடு ஒன்றில் இரண்டு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டு இருந்தனர். 82 மற்றும் 60 வயதான இரண்டு பெண்களே சம்பவத்தில் கொல்லப்பட்டிருந்தனர்.

நகரில் இந்த ஆண்டில் இதுவரை 54 படுகொலை சம்பவங்கள் இடமபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் 911 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அல்லது வேறும் வழிகளில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.