Reading Time: < 1 minute

கனடாவில் ஸ்காப்ரோவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இரண்டு தரப்புக்களுக்கு இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சமரில் இந்த உயிர் சேதங்கள் பதிவாகியுள்ளன.

ஸ்காப்ரோவின் மிட்லேண்ட் அவென்யூ பகுதிக்கு அருகாமையில் அமைந்துள்ள பிளாசா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பெரும் எண்ணிக்கையிலான துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டதாகவும் இரண்டு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனவும் மற்றும் ஒரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு ஆண்கள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் ஆள் அடையாள விபரங்களை போலீசார் இதுவரை வெளியிடவில்லை.

சம்பவ இடத்தில் ஒரு துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அதனை பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.