Reading Time: < 1 minute

கனடாவில் தொடர்ச்சியாக மளிகை பொருட்களின் விலைகள் அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக உணவு பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 1.5 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது கடந்த மே மாதத்தை விடவும் சிறிதளவு அதிகரிப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மளிகை பொருட்களின் விலைகள் 1.4 வீதமாக காணப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் மே மாதம் மளிகைப்பொருள் விலை உயர்வு அதிகளவில் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து இதுவரையில் உணவு பொருட்களின் விலைகள் 22.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

இதன்படி மக்களின் செலவுகளில் பிரதானமான செலவு அதிகரிப்பாக உணவுப் பொருள் விலை அதிகரிப்பு காணப்படுகின்றது.

மரக்கறி வகைகள், இறைச்சி பழ வகைகள் அல்ஹகோல் அல்லாத பானங்கள் என்பவற்றின் விலைகள் அதிகளவு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக உணவகங்களில் வழங்கப்படும் உணவின் அளவு குறைக்கப்படுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.