Reading Time: < 1 minute

கனேடிய நகரமொன்றில், காரில் பயணித்த இருவர் சுடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

வெள்ளிக்கிழமை இரவு, கனடாவின் வான்கூவர் நகரில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த வாகனம் வேறு இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து நடந்துள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

அதே நேரத்தில், அதே காரில் பயணித்த Hitkaran Johal (25) என்னும் இந்திய வம்சாவளி இளைஞர் உயிரிழந்துவிட்டார்.

விசாரணையில், அவர் ஏற்கனவே 2018ஆம் ஆண்டு குற்றச்செயல் ஒன்றிற்காக கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.

அத்துடன், இது இரு குழுக்களுக்கிடையிலான மோதலாக இருக்கலாம் என தாங்கள் கருதுவதாக தெரிவித்துள்ள பொலிசார், இந்த சம்பவத்தால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.