Reading Time: < 1 minute

கனடாவில் மொன்றியலில் 7 மாத குழந்தை ஒன்றுடன் கார் ஒன்று களவாடப்பட்டுள்ளது.

காரின் பின் இருக்கை பகுதியில் இந்த 7 மாத குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ரெக்ஸ்ப்ரோ பகுதியில் இந்த வாகனம் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளை நிற மெஸ்டா ரக கார் ஒன்று இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.

வாகனத்திற்குள் ஏழு மாத சிசு ஒன்று இருப்பது தெரியாமலேயே குறித்த நபர் வாகனத்தை களவாடி சென்றுள்ளார் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த வாகன திருட்டு சம்பவம் தொடர்பில் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் களவாடப்பட்ட வாகனத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த களவாடப்பட்ட வாகனம் சிறு விபத்துக்கு உள்ளாகி இருந்த நிலையில் போலீசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

விபத்தை மேற்கொண்ட சந்தேக நபர் காரை விட்டு இறங்கி தப்பித்துச் சென்றுள்ளார்.

குறித்த ஏழு மாத சிசு பாதுகாப்பான முறையில் மீட்கப்பட்டு குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனத்தை களவாடிய நபர் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சிசுவை தனித்து விட்டு சென்ற தாய்க்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்படுமா என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.