Reading Time: < 1 minute

கனடாவில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்பில் பிரித்தானிய மன்னர், மூன்றாம் சார்ள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

காட்டுத்தீ பாதிப்பு தொடர்பில் பிரித்தானிய மன்னரும் அவரது பாரியார் கமீலாவும் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர்.

ஜஸ்பர் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பாரிய காட்டு தீ அனர்த்தம் தொடர்பில் பெரும் கவலை கொண்டுள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார்.

மிக அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஜாஸ்பர் தேசிய பூங்கா பகுதியில் பாரிய காட்டுத்தை ஏற்பட்டு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்த விபத்து காரணமாக நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் சொத்துக்களை இழந்தவர்கள், இருப்பிடங்களை விட்டு வெளியேற நேரிட்டவர்கள் போன்றவர்களுக்கு தனது கவலையை வெளியிடுவதாக மன்னர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தீயை கட்டுப்படுத்துவதற்கு தன்னார்வ அடிப்படையில் பணி நிமித்தமும் பங்களிப்பு வழங்கிய அனைத்து நபர்களுக்கும் நன்றி பாராட்டுவதாக பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.