Reading Time: < 1 minute

நோவா ஸ்கோஷியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நோவா ஸ்கோஷியாவின் மவுண்ட் வில்லியம் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக கனடிய போலீசார் தெரிவிக்கின்றனர்.

ட்ரென்டன் மற்றும் கிரான்டன் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்ந்து குறித்து அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் இரண்டு வாகனங்களும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கின்றனர்.

இந்த வாகனங்களில் ஒரு வாகனத்தின் சாரதியும் சக பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து காரணமாக குறித்த அதிவேக நெடுஞ்சாலை சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.