Reading Time: < 1 minute
அமெரிக்காவின் சிக்காகோ மாநிலத்திற்கு பயணம் செய்த இந்தியாவின் எயார் இந்தியா விமானம் கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
புது டில்லியிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சிகாகோவுக்கு புறப்பட்டுச் சென்ற போயிங் ரக ‘எயார் இந்தியா 127’ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் கனடாவின் இகுவாலிட் விமான நிலையத்துக்கு திசை திருப்பப்பட்டுள்ளது.
பின்னர், இகுவாலிட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் மீண்டும் புறப்படும் நேரம் குறித்து அறிவிப்புகள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.