Reading Time: < 1 minute

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சான்றிதழை வழங்கியுள்ளது.

எயார் ஏசியா – அபுதாபி ஏர்லைன் நிறுவனத்திற்கு நேற்று விமான நடவடிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்படி இந்த விமான நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து தனது விமானச் சேவையை ஆரம்பிக்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.